ஒரே படத்தில் நடிகர்களாக இணையும் லோகேஷ் மற்றும் அனிருத்

ஒரே படத்தில் நடிகர்களாக இணையும் லோகேஷ் மற்றும் அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிய படத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரும் இதே படத்தில் முன்னணி நடிகராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரின் அறிமுகப் படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் இரட்டையர் அன்பரிவ் இயக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோகேஷ் தனது படங்களில் அனிருத் மற்றும் அன்பரிவ் ஆகியோருடன் தொடர்ந்து பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை. விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

Lokesh and anirudh make acting debut in new films

‘பவுடர்’ புகழ் லியாண்டர் லீ இசையில் ஜோடியில்லாமல் ஆடும் பிரபுதேவா

‘பவுடர்’ புகழ் லியாண்டர் லீ இசையில் ஜோடியில்லாமல் ஆடும் பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘நடனப் புயல்’ பிரபுதேவா நடிப்பில் தயாராகும் ‘முசாசி’ திரைப்படம், கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாகவும், விரைவில் இப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் என படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்திருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் “முசாசி” ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார்.

சவாலான போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, மலையாள நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். இவர் விஜய் ஸ்ரீஜி இயக்கிய ‘தாதா 87’ & ‘பவுடர்’ & விரைவில் வெளியாகவுள்ள ‘ஹரா’ ஆகிய படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் என்ற பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

‘முசாசி’ என வித்தியாசமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் படபிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது. இசையமைப்பாளர் லியாண்டர் லீ மார்ட்டி இசையமைப்பில், பின்னணி பாடகர் அந்தோணி தாசன் பாடியிருக்கும் இந்த பாடலுக்கு, நடன இயக்குநர் சாண்டி நடனம் அமைத்திருக்கிறார்.

இதனிடையே பிரபுதேவாவிற்கு முதன்முறையாக ஃபோக் மார்லி பாடகர் அந்தோணி தாசன் பின்னணி குரல் கொடுத்திருப்பதால் இந்த பாடலுக்கும், பாடலுக்கான காணொளிக்கும் பெரும் எதிர்பார்ப்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முசாசி

Prabhu Deva dances to Leander Lee music

போட்டியின்றி 3வது முறையாக FEFSI தலைவரானார் ஆர்கே செல்வமணி.; நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து

போட்டியின்றி 3வது முறையாக FEFSI தலைவரானார் ஆர்கே செல்வமணி.; நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ref. No. TFAPA/441

*ஏப்ரல் 13, 2023*

*தென்னிந்திய திரைப்பட ஊழியர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவராக மூன்றாம் முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. ஆர்.கே. செல்வமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.*

தமிழ்த்திரையுலகில் மிக முக்கிய அங்கமான FEFSI, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட திரு ஆர்.கே. செல்வமணி அவர்களின் தலைமையில் கடந்த சில வருடங்களாக சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் FEFSI-யின் ஊழியர்களின் நலனுக்காக அவர் எடுத்த பல முயற்சிகள் நம் பாராட்டுக்குரியவை.

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களின் சங்கங்களுடன் இணக்கமாக பல வருடங்களாக அவர் பணியாற்றி வருகிறார். 2022-ல் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கங்களுக்கும் FEFSI-க்கும் ஏற்பட்ட புதிய சம்பளங்களின் ஒப்பந்தத்திற்கு மிக முக்கியமான காரணம் திரு. ஆர்.கே. செல்வமணி அவர்கள்.

அனைவரையும் ஒருங்கிணைத்து பயணிக்கும் ஆற்றல், ஆளுமை மற்றும் பல திறன்கள் கொண்ட திரு. ஆர்.கே. செல்வமணி அவர்கள் FEFSI-யின் தலைவராக ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சர்யமில்லை.

திரு. ஆர்.கே.செல்வமணியுடன் இணைந்து பயணிப்பதில் தமிழ்த்திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் பெருமிதம் கொள்கிறது.

வாழ்த்துக்களுடன்,

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில்,

பாரதிராஜா ,
தலைவர்

T.G. தியாகராஜன்,
துணை தலைவர்

T.சிவா,
பொது செயலாளர்

RK Selvamani became FEFSI president for the 3rd time

இளையராஜா இசையில் 3 கால கேரக்டர்களில் விஜித் & ‘செங்களம்’ ஷாலி நடிக்கும் படம்

இளையராஜா இசையில் 3 கால கேரக்டர்களில் விஜித் & ‘செங்களம்’ ஷாலி நடிக்கும் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

VAU MEDIA ENTERTAINMENT-ன் தயாரிப்பாளர் துரை வீரசக்தி தயாரிப்பில், பாலுமகேந்திரா மாணவர், அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கி வரும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’.

இதுவரையிலான தமிழ் திரை வரலாற்றில் சமூகத்தின் ஏற்றதாழ்வை, புரையோடி நிற்கும் முக்கிய பிரச்சனையை அழுத்தமாக சொல்லும் அற்புதமான படைப்பாக உருவாகி வருகிறது இப்படம்.

“பரியேறும் பெருமாள்”, “அசுரன்” என சமத்துவம் பேசும் தமிழ் சினிமாவின் அழுத்தமான படைப்புகளின் வரிசையில், செல்வத்திலும் கல்வியிலும் உயர்ந்தாலும், ஒருவன் எந்த இடத்தில் இருந்தாலும், மனதில் மேன்மையான எண்ணங்கள் கொண்டவனே உண்மையான சமத்துவ மனிதன்.

வெறும் பட்டங்களால் தன் பெயரை அலங்கரிப்பதை விட, நல்ல சிந்தனைகளால் மனதை அலங்கரிப்பவனே மேன்மையானவன். இப்படி சிந்தனை உள்ள ஒரு சாமானியனை பற்றிய கதைதான் இந்த திரைப்படம்.

இரு குழந்தைகளை காணவில்லை என ஆரம்பிக்கும் விசாரணை, பல அதிர்ச்சியான திருப்பங்களுக்குள் நம்மை இழுத்து செல்கிறது.

1998, 2000, 2022 என மூன்று காலகட்டங்களில் இப்படத்தின் கதை நடக்கிறது. இதற்காக படக்குழு அக்காலத்திய படங்கள் பத்திரிகை செய்திகளை ஆராய்ந்து, கடும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, நேரடி லொகேஷன்களில் தத்ரூபமாக அந்த காலகட்டத்தை திரையில் கொண்டு வருகிறார்கள்.

இப்படத்தில் நாயகனாக புதுமுகம் விஜித் நடிக்கிறார். 20, 23 மற்றும் 46 வயது உள்ளவராக தோன்றுகிறார். மூன்று காலகட்டத்தில் நடக்கும் கதை என்பதால் கடும் பயிற்சி எடுத்து, உடல் எடையை கூட்டி, மீண்டும் குறைத்து இப்படத்தில் மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார்.

பல படங்களில் நடித்த பிறகுதான் இந்த மாதிரி பெரிய ரிஸ்காக உடல் எடையை குறைப்பது.. கூட்டுவது என முன்னணி நடிகர்கள் செய்வது வழக்கம். அதை புது முகமாகவே உற்சாகத்தோடு.. தோற்றத்தில் மட்டுமல்லாது நடிப்பிலும்.. படபிடிப்பில் கைதட்டல் பெறுகிறார்,நாயகன்.

நாயகன் மட்டுமல்லாது இப்படத்தின் நாயகி மற்றும் ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுமே மூன்று காலகட்டங்களில் மூன்று வித தோற்றங்களில் நடிக்கிறார்.
நாயகியாக, செங்களம் வெப் சீரிஸ்’ல்
நாச்சியாராக நடித்து பலரது பாராட்டுகளை வாங்கிய ஷாலி நிவேகாஸ் நடிக்கிறார்.

விஜித், ஷாலி நிவேகாஸ் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, MIME கோபி, அருள்தாஸ், சுபத்ரா, விஜய் டிவி தீபா, சாய் வினோத் மற்றும் நடிகர் கதிரின் தந்தை லோகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இத் திரைபடத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார். சூப்பர் கிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் #விடுதலை படத்திற்கு பிறகு இந்தத் திரைப்படத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

விடுதலை இயக்குனர் வெற்றிமாறன் பாலுமகேந்திரா உதவியாளர். இப்படத்தை இயக்கிவரும் சிவபிரகாஷ், பாலு மகேந்திராவின் சினிமா பட்டறை மாணவர். பாலு மகேந்திராவின் இந்த இரு இயக்குனர்களுக்கு இளையராஜா இசை அமைப்பது குறிப்பிடத்தக்கது.

‘சத்தம் போடாதே’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த JB தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ராமர், படத்தொகுப்பு செய்துள்ளார். இவர் ‘அசுரன்’, ‘விடுதலை’ போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. தரமான படைப்புகளை தந்து வரும், VAU MEDIA ENTERTAINMENT-சார்பில் தயாரிப்பாளர் துரை வீரசக்தி இப்படத்தை தயாரித்து வருகிறார்.

The film stars Vijith & ‘Sengalam’ Shali in 3 period characters

அம்பேத்கர் பற்றி சினிமாவில் சொல்வது உண்மையல்ல.; A PADAM விழாவில் திருமாவளவன் பேச்சு

அம்பேத்கர் பற்றி சினிமாவில் சொல்வது உண்மையல்ல.; A PADAM விழாவில் திருமாவளவன் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதியவர் டாக்டர் அம்பேத்கர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி குரல் கொடுத்த தலைவர்களில் மிக முக்கியமானவர் இவர்.

தற்போது இவரது முதல் எழுத்தான A என்ற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு A PADAM என்று தலைப்பிட்டுள்ளனர்.

ராஜகணபதி என்பவர் தயாரித்துள்ள இந்த படத்தை Casteless சிவா கோ இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா ஏப்ரல் 13-ஆம் தேதி இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற எம் பி யும் விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டார்.

மேலும் அந்த கட்சியின் துணைத் தலைவர் வன்னியரசு & நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தொல் திருமாவளவன் பேசும்போது..

” இந்தப் படத்தின் தலைப்பை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை.. சொன்னால் சரி வராது. (A படம்)

சிவப்பு வண்ணத்தை காட்டினால் அது கம்யூனிசம் என்ற அளவிலே பொருள்பட்டு வருகிறது.

நடிகை இயக்குனர் லட்சுமி பேசும்போது இடதுசாரி கொள்கை குறித்து பேசி இருந்தார்.

அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து அகிம்சையை விரும்புவர்களே இடதுசாரி வாதிகள். நீங்கள் பேசியதும் இடது சாரியின் கொள்கைகள் தான்.

சினிமாவை பொறுத்த வரை ஒரு சேரி பகுதியை குறிப்பிட்டு காட்ட அல்லது தலித் சமுதாயத்தை காட்ட அவர்கள் அம்பேத்கரின் உருவப்படத்தை பயன்படுத்துகின்றனர்.

அம்பேத்கர் என்பவர் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் மட்டுமல்ல அவர் அனைத்து மக்களுக்குமான தலைவர்” என்று பேசினார் தொல் திருமாவளவன்.

Thirumavalavan speech at A PADAM function

400+ திரையரங்குகளில் ஆடவரும் ‘ருத்ரன்’ லாரன்ஸ்.; ரிலீஸ் கன்ஃபார்ம்

400+ திரையரங்குகளில் ஆடவரும் ‘ருத்ரன்’ லாரன்ஸ்.; ரிலீஸ் கன்ஃபார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ருத்ரன்’ படம் தமிழ் புத்தாண்டு பண்டிகைக்கு ஏப்ரல் 14 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

‘ருத்ரன்’ தயாரிப்பாளர்கள் டப்பிங் உரிமை ஒப்பந்தத்தை 4 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் முடித்துவிட்டு, பிரச்சனையில் சிக்கியுள்ளனர்.

இப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்பட்டதா இல்லையா என்பது ரசிகர்கள் மத்தியில் புதிராக உள்ளது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ருத்ரன் படம் வெளியிடுவதற்கு தடை கோரி திருசஞ்சய் லால்வாணி நிறுவனத்தார் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்நிலையில் இன்று ஏப்ரல் 13 பட தயாரிப்பாளர் கதிரேசன் நிறுவனத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராகி சஞ்சய் நல்வாணி நிறுவனத்தினர் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. இதனைஅடுத்து திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கிக் கொண்டது கோர்ட்.

மேலும், ‘ருத்ரன்’ படத்தை தமிழகத்தில் 400 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘Rudhran’ to release on 400+ screens in Tamil Nadu

More Articles
Follows