தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்திற்கு அதிகாலை 9:00 மணிக்கு தான் காட்சிகள் திரையிடப்பட வேண்டும் என அரசு அறிவித்து இருந்தது. ஆனால் அதிகாலை 4 மணி காட்சி 7 மணி காட்சிகள் திரையிட அனுமதி அளிக்க வேண்டும் என வழக்கு தொடுத்து இருந்தது தயாரிப்பு நிறுவனம்.
அதிகாலை 4:00 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது.. 7 மணி காட்சிக்கு அனுமதி வேண்டும் என்றால் தமிழக அரசை தயாரிப்பு நிறுவனம் நாடலாம் என நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்திற்கு லியோ படத்தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர்கள் குழுவினர் வந்த இருந்தனர்.
அவர்கள் உள்துறை செயலாளரை சந்தித்துவிட்டு திரும்பிய பிறகு, ஓட்டுநரை காரை எடுத்து வரச் சொல்லி இருந்தனர்.
அப்போது அந்த கார் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் மீது மோதியது. தலைமைச் செயலக வளாகத்தில் நடந்த இந்த விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Leo movie advocates car met with accident