தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமாவில் மட்டுமே சிலர் ஹீரோக்களாக வாழும் தருணத்தில் நிஜத்திலும் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ்.
இவர் எண்ணற்ற அனாதை குழந்தைகளை தத்தெடுத்து தன் அறக்கட்டளை சார்பில் வளர்த்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ் அறக்கட்டளை என்கிற பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கி சேவை செய்து வருகிறார்.
பார்வையற்ற மற்றும் இதர மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகம் உதவி வருகிறார். அவர்களின் சிகிச்சைக்கும் லட்சங்களை செலவு செய்து வருகிறார்.
மேலும் ஏழைகள் வீடு கட்டவும், வாழ்க்கை மேம்பாட்டுக்காகவும் தனது அறக்கட்டளை மூலம் உதவி வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா நிவாரண தொகையாக 3 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார் லாரன்ஸ்.
– பிரதமரின் PM Cares நிதிக்கு 50 லட்சம் ரூபாய்
– முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய்
– FEFSI சங்கத்திற்கு 50 லட்சம் ருபாய்
– நடன கலைஞர்கள் சங்கத்திற்கு 50 லட்சம் ரூபாய்
– மாற்று திறனாளிகளுக்கு உதவ 25 லட்சம் ரூபாய்
– ராயபுரம் பகுதியில் உள்ள தினகூலி தொழிலாளர்களுக்கு 75 லட்சம் ருபாய்
என மொத்தமாக 3 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக ராகவா லாரன்ஸ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்துடன் ரஜினிகாந்த் ஆசியுடன் சந்திரமுகி 2 படத்தில் நடிக்கவுள்ளதை அறிவித்துள்ளார். இந்த 3 கோடி ரூபாய் சந்திரமுகி 2 பட அட்வான்ஸ் தொகை எனவும் கூறப்படுகிறது.
Lawrence donates Rs 3 crore to Covid 19 relief fund