தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா தயாரித்து நடித்த ’சூரரைப்போற்று’ மற்றும் ’ஜெய்பீம்’ ஆகிய இரண்டு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
இந்த படங்கள் ஓடிடியில் வெளியானதால் தியேட்டர்கள் உரிமையாளர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புகள் வந்தன.
விரைவில் சூர்யாவின் அடுத்த படமான ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை திரைக்கு கொண்டு வரவுள்ளது சன் பிக்சர்ஸ். இது பிப்ரவரியில் வெளியாகிறது.
இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யார்? யாருடைய படத்தில் நடிக்க போகிறார்? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சூர்யா.
இதில் வெற்றிமாறன் படம் முதலில் ஆரம்பிக்கும் என தெரிகிறது.
இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு சிவா இயக்கத்தில் ஒரு படமும், சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்திலும் சூர்யா நடிக்கவிருக்கிறாராம்.
Kollywood top director wants to work with Suriya