தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பொதுவாகவே ‘ரஜினியும் அரசியலும்’ என்ற நிலை தான் தமிழகத்தில் கால் நூற்றாண்டுகளாக உள்ளது.
இந்த டிசம்பர் மாதம் மட்டுமே தன் பரபரப்பு அறிக்கைகளால் அரசியல் களத்தை சூடாக்கினார் ரஜினிகாந்த்.
ஜனவரியில் கட்சி தொடக்கம்; டிசம்பர் 31 ல் தேதி அறிவிப்பு’ எனஅரசியல் நிலைப்பாட்டை தெரிவித்தார் ரஜினி.
ரஜினியின் இந்த முடிவுக்கு…
“ஒரு வழியாக நீங்கள் அரசியலில் இறங்குகிறீர்கள். மகிழ்ச்சி. உங்கள் புதிய பாத்திரத்துக்கு வாழ்த்துகள்” என வாழ்த்தினார் குஷ்பு.
தற்போது, கட்சி தொடங்கவில்லை என நேற்று அறிவித்தார் ரஜினிகாந்த்.
இது குறித்து குஷ்பூ தெரிவித்துள்ளதாவது…
அன்புள்ள ரஜினிகாந்த் சார், உங்களுடைய முடிவு அனைத்து தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டது.
ஆனால் உங்கள் ஆரோக்கியம் & உடல்நலத்திற்கு முன்பு வேறெதுவும் பெரிதல்ல என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
உங்கள் நலம்விரும்பியாக, ஒரு தோழியாக உங்களுடைய முடிவை வரவேற்கிறேன்.
நீங்கள் எனக்கு விலைமதிப்பற்றவர். நன்றாக மகிழ்ச்சியாக இருங்கள்” என தெரிவித்துள்ளார் குஷ்பூ.
Khushbu sundar about Rajinikanth’s political desicion