தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி ராமநாதபுரத்தில் தன் அரசியல் கட்சி அறிவிப்பை அறிவிக்கிறார் கமல்ஹாசன்.
அதன்பின்னர் மதுரையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளவிருக்கிறார்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிகிறார்.
இந்நிலையில் தன் அரசியல் பணி பற்றி அவரின் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளதாவது…
போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னையில் தமிழக அரசு முதலாளித்துவத்தை காட்டுகிறது. வேலை நிறுத்தம் செய்த 7 நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்தது ரொம்பவே அதிகப்படியான தண்டனை.
போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வுக்காக அறிஞர்கள், மற்றும் அது தொடர்பான விஞ்ஞானிகளை நாடப்போகிறேன்.
எனக்கு ஏற்படும் அரசியல் குறித்த சந்தேகங்களை கேரள முதல்வர் பினராயி விஜயன் தீர்த்து வைக்கிறார்.
பல கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள நல்லவர்கள் வந்தால் கண்டிப்பாக நாங்கள் எங்கள் அணியில் சேர்த்துக் கொள்வோம்’ என்றார் கமல்ஹாசன்.
Kerala CM Pinarayi Vijayan is clearing my political doubts says Kamalhassan