‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது

‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Vetri‘ஜீவி’ புகழ் வெற்றி நாயகனாக நடிக்க ஜெ.என். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரிக்கும் புதிய படத்தை குரு ராமானுஜம் இயக்குகிறார். இவர் கழுகு படத்தின் இயக்குனர் சத்ய சிவாவிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்தவர். இப்படத்தை சமூக விழிப்புணர்வு மற்றும் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக இயக்குகிறார். வெற்றி நாயகனாக நடிக்கிறார் இவருக்கு ஜோடியாக தியா மயூரிகா நடிக்கிறார். குணச்சித்திர பாத்திரத்தில் மாரிமுத்து நடிக்க, கே.ஜி.எஃப் படத்தில் வில்லனாக நடித்த ராமச்சந்திர ராஜு இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மற்ற நடிகர்-நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் பூஜையுடன் இன்று (06.12.2019) துவங்கியது.

படத்தைப் பற்றிய மற்ற விபரங்களை தயாரிப்பு நிறுவனம் பின்னர் அறிவிக்கும்.

தயாரிப்பு – பார்த்தசாரதி இயக்கம் – குரு ராமானுஜம்
வசனம் – சி.முருகேஷ் பாபு
புகைப்படம் – பாஸ்கர்
ஒளிப்பதிவு – எஸ்.ராமலிங்கம் படத்தொகுப்பு – ராஜா முகமது (பருத்தி வீரன் & சுப்ரமணியபுரம்)
கலை இயக்கம் – எஸ்.பத்மநாபன்
சண்டை பயிற்சி – சுதேஷ்
தயாரிப்பு உருவாக்கம் – அபிமன்னன் எம்.ஏ.
தயாரிப்பு நிறுவனம் – ஜெ.என். சினிமாஸ்

தனுசு ராசி நேயர்களே படத்தில் தயாரிப்பாளர் & தாலிக்கு வந்த சோதனை

தனுசு ராசி நேயர்களே படத்தில் தயாரிப்பாளர் & தாலிக்கு வந்த சோதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Controversial dialogue scenes in Dhanusu Raasi Neyargale movieஹரிஷ் கல்யாண், டிங்கான்கனா சூர்யவன்சி, ரெபா மோனிகா ஜான் மற்றும் யோகிபாபு நடித்துள்ள படம் தனுசு ராசி நேயர்களே.

நடிகரும் இயக்குனருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கோகுலம் சிட்பண்டு நிறுவனர் கோகுலம் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

இந்த படம் இன்று வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில வசனங்கள் அந்த படத்தின் தயாரிப்பாளரையும் அதே சமயத்தில் மற்றொரு வசனத்தில் தாலியின் புண்ணியத்தையும் கெடுப்பதாக உள்ளது.

ஒரு காட்சியில் குடிபோதையில் நாயகன் நாயகி செக்ஸ் வைத்துக் கொள்கின்றனர். அதன்பின்னர் ஹீரோ தன்னை திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார்.

ஆனால் ஹீரோயினோ தனக்கு லட்சியம் இருக்கிறது. நான் செவ்வாய் கிரகம் செல்ல வேண்டும். திரும்பி வரப்போவதில்லை. எனவே உன்னை திருமணம் செய்துக் கொள்ள முடியாது.

மேலும் தாலி என்பது நாய்க்கு கட்டப்படும் பெல்ட் போல. எனக்கு அந்த வாழ்க்கை செட்டாகாது. அதை கட்டிக்கொண்டு உன்னோடு வரமுடியாது என்கிறார்.

தமிழ் சினிமாவில் தாலி சென்டிமெண்ட்டில் எத்தனையோ படங்கள் ஓடியது. ஆனால் நாகரீகம் என்ற பெயரில் தாலியை நாய் பெல்ட்டுக்கு நிகராக பேசுவது தாய்மார்களின் மனதை புண்படுத்தும் வசனமாக மாறும்.

இந்த படத்திற்கு யோகிபாபுவின் கால்ஷீட் சரியாக கிடைக்கவில்லை. எனவே படத்தின் கலைஞர்களுடன் நடிக்காமல் அவரின் காட்சிகள் தனியாக படமாக்கப்பட்டுள்ளது.

அவரே படத்தின் ஹீரோ யார்? ஹீரோயின் யார்? என அடிக்கடி பேசிக் கொண்டே இருக்கிறார். அவர்களுக்கு பிரச்சினை எப்படி எல்லாம் உருவாகிறது என்பதையும் விளக்குகிறார்.

நான் சும்மா இந்த இடத்துக்கு வரல. பல வருசமாக கஷ்டப்பட்டேன். அதற்காக பலன் இப்போது கிடைத்துள்ளது என்கிறார்.

இறுதியாக க்ளைமாக்ஸில் கொடுத்த கால்ஷீட்டுக்கு பேசிட்டேன். என்ற டயலாக்கும் பேசுகிறார்.

என்ன இருந்தாலும் அவர் நிச்சயமாக சம்பளம் வாங்காமல் பேசியிருக்க மாட்டார். அப்படியிருக்கையில் ஏதோ கடமைக்காக செய்துவிட்டதை போல் பேசியிருக்கிறார்.

இது நிச்சயம் இந்த பட தயாரிப்பாளர் மட்டுமில்லாமல் மற்ற தயாரிப்பாளர்களையும் அவமானப்படுத்துவதாகவே உள்ளது.

மேலும் யோகிபாபு காட்சிகள் இல்லாமலே படம் சரியாக தான் செல்கின்றது. அப்படியிருக்கையில் இந்த வசனங்கள் தேவையா? என்பதே படம் பார்த்தவர்களின் கேள்வியாக உள்ளது.

Controversial dialogue scenes in Dhanusu Raasi Neyargale movie

ஒரே படத்தில் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் & உலகநாயகன்

ஒரே படத்தில் மீண்டும் இணையும் சூப்பர் ஸ்டார் & உலகநாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lokesh kanagarajநடிகர் கமல் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதுதான் ரஜினி தன் சினிமா பயணத்தை தொடங்கினார்.

கே. பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் படத்தில் கமலுடன் இணைந்து நடித்தார் ரஜினிகாந்த். இதுதான் ரஜினிக்கு முதல் படம்.

ஆனால் அப்போதே கமல் சினிமாவில் உச்சத்தில் இருந்தார்.

இதன் பின்னர் மூன்று முடிச்சு, இளமை ஊஞ்சலாடுகிறது உள்ளிட்ட 10 படங்களில் இணைந்து நடித்தனர்.

அதன் பின்னர் இருவரும் இணைந்து நடிப்பதை விட்டு விட்டனர்.

தங்களுக்கென தனி தனி பாதையில் சென்றாலும் உலகமே வியக்கும் அளவுக்கு நட்புடன் பழகி வருகின்றனர்.

தற்போது சினிமாவில் கமல் 60 வருடங்களை கடநதுவிட ரஜினி 45 வருடங்களை நெருங்கி கொண்டிருக்கிறார்.

தற்போது இருவரும் அரசியல் களத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஒரு படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இணைந்து நடிக்கவில்லை. கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்கவிருக்கிறாராம்.

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது-

தில்லு முள்ளு போல உலகநாயகன் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பாரா? என்றுதானே கேட்கிறீர்கள்?

காத்திருப்போம் தலைவரே…

வீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ” ப ர மு “

வீட்டிற்கு அடங்காத புள்ளீங்கோ பற்றிய கதை ” ப ர மு “

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Paramuகூலி வேலை செய்து பிள்ளைகளை கல்லூரியில் படிக்க வைக்கும் பெற்றோர்களின் மகன்கள் கல்லூரியில் தறுதலையாக வலம் வந்து மற்றவர்களால் குறிப்பாக முகநூலில் ” புள்ளீங்கோ” என அழைக்கப்படும் மாணவர்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கூத்தடிக்கும் வாழ்க்கையில் தீடீர் புயல் போல் நடைபெறும் திகிலான சம்பவங்கள்
அவர்களது வாழ்க்கையையே புரட்டி போடுகிறது. அதன் பிறகு சஸ்பென்சோடு அவர்களது வாழ்க்கை பயணிக்கின்றது ‘ இதன் உச்சகட்டம் என்ன ? என்பது தான் சக்சஸ் புல் சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாகி உள்ள ” ப ர மு ” என்றார் இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி தயாரித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கி உள்ளார் புதுமுகமான மாணிக்ஜெய்.

பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார் கோவிந்தராஜ், சேலம், ஆட்டையாம்பட்டி, ஊட்டி, திருப்பத்தூர், மற்றும் பெங்களூர் முழுவதும் படமாக்கி உள்ளார் ஒளிப்பதிவாளர் மோகன்.

மாணிக் ஜெய், சித்ரா, ஷாலினி, சந்தியா, ரஞ்சித், மதி, சின்னமணி பெஞ்சமின் ஆகியோருடன் ஊர் மக்களும் நடித்துள்ளனர்.

இந்த மாதம் (டிசம்பர்) திரைக்கு வருகிறது. “பரமு

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் மூலம் ஹரீஸ் கல்யாண்-சஞ்சய் பாரதிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்!

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் மூலம் ஹரீஸ் கல்யாண்-சஞ்சய் பாரதிக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Harish kalyan and director sanjay bharathiஎதிர்வரும் வெள்ளிக் கிழமை வெளியாகும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் மூலம் அப்படத்தின் நாயகன் ஹரீஷ் கல்யாணுக்கும் இயக்குநர் சஞ்சய் பாரதிக்கும் ஜாக்பாட் அடித்திருக்கிறது. ஆம்… முதல் படம் வெளிவருவதற்கு முன்பே இந்த ஜோடிக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்து விட்டது. கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயன் தயாரிக்கும் அடுத்த படத்தில் இவ்விருவரும் மீண்டும் இணைகின்றனர். தயாரிப்பாளர் ஜி.தனஞ்ஜெயனே அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கும் இந்த அறிவிப்பில் சில சுவையான அம்சங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இது குறித்து டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் தெரிவித்ததாவது….

“கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்டி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தயாரிக்கும் படத்தில் ஹரீஷ் கல்யாண் நாயகனாக நடிக்க, சஞ்சய் பாரதி இயக்குகிறார். இது தெய்வீகமான, ஆக்ஷன் கலந்த அதிரடித் திரைப்படமாகும். ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் டிரைலரால் நான் வெகுவாக கவரப்பட்டேன். படவுலகில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் நான், ரசிகர்களின் நாடித் துடிப்பை துல்லியமாகக் கணிக்கும் இயக்குநர்கள் மிகச் சிலரைத் தான் பார்த்திருக்கிறேன். அத்தகைய சிலரில் ஒருவர்தான் இயக்குநர் சஞ்சய் பாரதி. இத்தகைய பண்புக்கூறு மிகுந்தவராக இருப்பதால் சஞ்சய் பாரதியின் முன்னேற்றம் ஜெட் வேகத்தில் இருக்கும் என்பது திண்ணம்.

‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் டீஸருக்கும் டிரைலருக்கும் இளைய தலைமுறையிடம் கிடைத்திருக்கும் தனித்துவம் மிக்க வரவேற்புபைப் பார்த்த நான் வாழ்த்து தெரிவிக்க சஞ்சய் பாரதிக்கு போன் செய்தேன். சாதாரணமாகத் தொடங்கிய எங்கள் உரையாடல் மேலும் தொடர்ந்துபோது, ஒரு கதைக் கருவையும் ஒரு பிரதான பாத்திரத்தையும் என்னிடம் பேச்சு வாக்கில் தெரிவித்தார். உடனடியாக என்னை அது மிகவும் கவரவே, ஹரீஸ் கல்யாணைத் தவிர வேறு யாரையும் இந்த வேடத்துக்கு நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்று சொன்னேன். சஞ்சய் பாரதியும் அதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவே, நாங்களே இணைந்து இந்தப் படத்தை உருவாக்கத் திட்டமிட்டோம். அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டின் மத்தியில் துவக்கப்பட இருக்கும் இந்தப் படத்தின் பெயர் மற்றும் நட்சத்திரங்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்களுடன் படத்தின் வெளியீட்டு தேதியும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்” என்றார்.

தயாரிப்பாளர் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் கிரியேடிவ் என்டர்டெயிண்மெண்ட் சார்பில் தற்போது சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி’ படத்தைத் தயாரித்து வருகிறார். இது தவிர, இவரே இயக்கவிருக்கும் படத்தைப் பற்றியும் அதில் நடிக்கும் நடிக நடிகையர் பற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாக இருக்கிறது.

42 வருசமா பிரசாத் ஸ்டூடியோவுக்கு வாடகை கொடுக்காத இளையராஜா?; பிரச்சினை கோர்ட்க்கு போனது

42 வருசமா பிரசாத் ஸ்டூடியோவுக்கு வாடகை கொடுக்காத இளையராஜா?; பிரச்சினை கோர்ட்க்கு போனது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ilayaraaja1977 முதல் கடந்த 42 வருடங்களாக சினிமா படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசைஞானி இளையராஜா.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ரெக்கார்ட்டிங் பணிகளை செய்து வருகிறார்.

அங்கு இசையமைப்பதற்கு ஒப்பந்தப் பத்திரமும் போட்டுள்ளார்.

ஆனால் இவர் வாடகை கொடுப்பத்தில் என கூறப்படுகிறது. அதாவது இளையராஜா இசையமைக்கும் படங்களின் தயாரிப்பாளர்களே இடத்திற்கான வாடகையையும் கொடுப்பதாக தெரிகிறது.

அண்மைக்காலமாக இளையராஜா அவ்வளவாக படங்களுக்கு இசையமைப்பதில்லை. எனவே வாடகை கொடுக்காத காரணத்தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

பிரசாத்தின் பேரன், சாய் பிரசாத் என்பவர் ஸ்டூடியோ நிர்வாகப் பொறுப்பை ஏற்ற பின்னர் இந்த மோதல் அதிகரித்துள்ளது.

இதனால் இளையராஜாவுக்கு இசையமைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இளையராஜாவுக்கு ஆதரவாக இயக்குநர் பாரதிராஜா, சீமான், பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி ஆகியோர் பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆனால் அங்கு சமரசம் ஏற்பட்டதாக தெரியவில்லை.

இதனையடுத்து பிரசாத் ஸ்டூடியோ மீது, இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பியுள்ளது.

More Articles
Follows