தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மதுரை மேலூரை சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி மீனாட்சி.
இவர்களுக்கு கலைச்செல்வன் என்ற ஒரு மகன் இருந்ததாக கூறியிருந்தனர்.
அவர்தான் இப்போது நடிகர் தனுஷ் ஆக இருக்கிறார் என மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர் .
அதன் பின்னர் நடந்த விசாரணையில் மதுரை கோர்ட்டில் நடிகர் தனுஷ் சார்பாக பிறப்பு, அடையாள ஆவணங்கள் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து அந்த வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டு, மேலூரில் தனுஷ்மீது தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது .
இந்நிலையில், கதிரேசன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நடிகர் தனுஷ் பிறப்புச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் ஆகியவை போலியாக தயார் செய்து தாக்கல் செய்துள்ளார்.
எனவே அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை புதூர் காவல் நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்துள்ளார்.
மேலும், மதுரை காவல்துறை ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் மீண்டும் இந்த புகார் விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிகிறது.
Kathiresan filed case against actor Dhanush regarding his son issue