தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘திருடன் போலீஸ்’, ‘உள்குத்து’ ஆகிய படங்களை இயக்கியவர் கார்த்திக் ராஜு.
அவருடைய மூன்றாவது படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் தயாராக இருக்கிறது.
இந்தப் படத்தில், சந்தீப் கிஷன் ஜோடியாக அன்யா சிங் நடிக்கிறார்.
‘லெக்ஸ் டலியானிஸ்’ மற்றும் ‘கைதி பேண்ட்’ ஆகிய பாலிவுட் படங்களில் நடித்துள்ள அன்யாவுக்கு, இதுதான் முதல் தமிழ்ப்படம்.
பிகே வர்மா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு எஸ்.தமன் இசையமைக்கிறார்.
சுப்பு தயாரிக்கும் இந்தப் படத்தில், தமிழில் கருணாகரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதே வேடத்தை, தெலுங்கில் ‘வெண்ணிலா கபடிக்குழு’ கிஷோர் நடிக்கிறார்.
ஹைதராபாத்தில் இதன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. 40 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.