மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் சின்னம்; ரஜினி ஆதரவை கேட்கும் கமல்

மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் சின்னம்; ரஜினி ஆதரவை கேட்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamals MNM party gets Torch Light symbol Will Rajini support

சிறுவயது முதல் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கமல் அவர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.

இதனையடுத்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார்.

வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது.

அப்போது மக்கள் நீதி மய்யம் சார்பாக ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளார். விரைவில் எந்த தொகுதி? என்பதை அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

மற்ற தொகுதிகளில் தன் கட்சி உறுப்பினர்கள் போட்டியிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.

இத்துடன் தமிழகத்தில் உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் தன் கட்சி உறுப்பினர்கள் களம் இறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்திற்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

இதனிடையில் உங்கள் கட்சிக்கு நண்பர் ரஜினி ஆதரவளிப்பாரா? என செய்தியாளர்கள் கேட்டனர்.

நான் கேட்பதை விட அவர் ஆதரவளிக்க வேண்டும் எனவும் கமல் மறைமுகமாக ரஜினி ஆதரவை கேட்டுள்ளார்.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என முன்பே ரஜினி ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

Kamals MNM party gets Torch Light symbol Will Rajini support

இடைத்தேர்தலில் போட்டி; பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு; விஷால் முடிவு

இடைத்தேர்தலில் போட்டி; பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு; விஷால் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

By elections to 18 Assembly constituencies in TN Vishal plans to Nominateகோலிவுட் நடிகர்கள் பலர் அரசியலில் ஈடுபட்டு வருவது நாம் அறிந்த ஒன்றுதான்.

சரத்குமார், ராதாரவி, கார்த்தி, டிஆர், சீமான் உள்ளிட்ட பலர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது கமலும் களத்தில் இறங்கியுள்ளார். விரைவில் ரஜினிகாந்த் களம் இறங்கவுள்ளார்.

இந்நிலையில் நடிகர் விஷாலும் வருகிற இடைத்தேர்தலில் களம் இறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஆர்.கே.நகர் சட்டசபை இடைத்தேர்தலிலேயே போட்டியிட முயற்சித்திருந்தார் விஷால். ஆனால் அவரது வேட்புமனு அப்போது நிராகரிக்கப்பட்டதால் அவர் போட்டியிடவில்லை.

இந்நிலையில் அவர் வருகிற பார்லிமென்ட் தேர்தல் குறித்து கூறியுள்ளதாவது…

இடைத்தேர்தலில் போட்டியிடுவேன்.

பார்லிமென்ட் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை விரைவில் அறிவிப்பேன்.

இந்த இரண்டு தேர்தல்களும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் முக்கியமானதாக இருக்கும்” என விஷால் கூறியுள்ளார்.

By elections to 18 Assembly constituencies in TN Vishal plans to Nominate

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கும் மோகன் ராஜா

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்கும் மோகன் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Velayudham Vijay and Mohanraja team up for Thalapathy 64ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை முடித்த பின் விஜய்யின் 64வது படத்தை இயக்குவது யார்? என்ற கேள்வி பல நாட்களாக கோலிவுட் எழுந்தது.

இந்நிலையில், ஒரு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் மோகன்ராஜா விரைவில் விஜய்யை வைத்து படத்தை இயக்குவேன் எனத் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே வேலாயுதம் படத்தில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

After Velayudham Vijay and Mohanraja team up for Thalapathy 64

அண்ணனுக்கு முன்பே திருமணம்; தனுஷ் வழியில் சிம்பு தம்பி குறளரசன்

அண்ணனுக்கு முன்பே திருமணம்; தனுஷ் வழியில் சிம்பு தம்பி குறளரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbus brother Kuralarasan is getting married next monthஇயக்குனர் செல்வராகவனின் தம்பி தான் நடிகர் தனுஷ் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

அண்ணன் திருமணத்திற்கு முன்பே ரஜினி மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொண்டார் தனுஷ் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவரைப் போல சிம்புவின் தம்பி குறளரசனும் அண்ணனுக்கு முன்பே திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் குறளரசன்.

அண்மையில் அவர் முஸ்லீம் மதத்திற்கு மாறியிருந்த தகவலை நாம் பார்த்தோம்.

முஸ்லீம் மதத்தை சேர்ந்த தன் கேர்ள்ட் பிரண்ட்டை மணக்கவிருக்கிறராம் குறளரசன்.

இவர்களின் திருமணம் அடுத்த மாதம் ஏப்ரல் 26ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் குறளரசன் தந்தை டி. ராஜேந்தர் வெளியிட உள்ளார்.

Simbus brother Kuralarasan is getting married next month

இளையராஜா-75 விழாவில் விஷால் ஊழல்; தயாரிப்பாளர்கள் புகார்

இளையராஜா-75 விழாவில் விஷால் ஊழல்; தயாரிப்பாளர்கள் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Producers S V Sekar JSK K Rajan slams Vishal and Ilayaraja 75 showசென்னையில் கடந்த பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை தயாரிப்பாளர் சங்கம் சார்பாக விஷால் நடத்தினார்.

இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் மலையாள, தெலுங்கு, கன்னட, ஹிந்தி திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பலகோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், கே.ராஜன், எஸ்.வி.சேகர் ஆகியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அவர்கள் கூறியதாவது:

இளையராஜா 75 நிகழ்ச்சியில் பல முறைகேடுகள் நடந்துள்ளன.

அவருக்கு பாராட்டு விழா என்றால் விருது கொடுத்து இருக்கலாம். ஆனால் 3½ கோடி ரூபாய் அவருக்கு சம்பளமாக கொடுத்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் இளையராஜாவுக்கு சம்பளம் கொடுத்துள்ளனர்.

அவர்தான் தயாரிப்பாளர்களுக்கு மரியாதை செய்திருக்க வேண்டுமே தவிர, அந்தத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலேயே மூன்றரை கோடி வாங்கியுள்ளார்.

மேலும் விஷாலுக்கு நெருக்கமான நண்பர்கள் நடிகர்கள் நந்தா, ரமணா மீதும் குற்றம் சாட்டியுள்ளனர்.

நடிகர் ரமணா மூன்றரை கோடி கான்ட்ராக்ட் எடுத்து விழா மேடைகளை அமைத்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.

எத்தனையோ தயாரிப்பாளர்களின் பணம் அது. அந்தப் பணத்தை முறைகேடாகச் செலவு செய்வது என்பது திருட்டுக்குச் சமமான விஷயம். அதை தான் விஷால் செய்துள்ளார்.” என்றும் எதிரணியினர் விஷால் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

Producers S V Sekar JSK K Rajan slams Vishal and Ilayaraja 75 show

எம்.எல்.ஏ. கருணாஸ் தமிழக அரசிற்கு கோரிக்கை

எம்.எல்.ஏ. கருணாஸ் தமிழக அரசிற்கு கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karunasசீர்மரபினர் சமூகத்தை “சீர்மரபினர் பழங்குடியினராக” மாற்றம் செய்ததை மத்திய அரசு ஆவணங்களிலும் ஒரே மாதிரியாக
மாற்ற செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்
எம்.எல்.ஏ. கருணாஸ் கோரிக்கை

தமிழகத்தில் டிஎன்சி (DNC) என அழைக்கப்பட்ட சீர்மரபினர் சமூகத்தினர் இனி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பெற வசதியாக டின்என்டி (DNT) அதாவது சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடந்து நான் சட்டமன்றத்தில் எடுத்துரைத்தேன். நான் மட்டுமன்றி பலர் போராடினர். இப்போது தமிழக அரசு செவிசாய்த்துள்ளது. அதே சமயம் முரண்பாடுகளானவற்றையும் களையவேண்டும்.
இதுதொடர்பாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில்,

சீர்மரபினர் சமூகத்தினர் என்பது தமிழகத்தை பொருத்தவரை சீர்மரபினர் பழங்குடியினரை மட்டுமே குறிப்பிடுவதாக சமூகநலத்துறை அமைத்த குழு தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழுவின் பரிந்துரையை ஏற்று 1979ம் ஆண்டு சீர்மரபினர் பழங்குடியினர் என்ற பெயரை சீர்மரபினர் சமூகத்தினர் என மாற்றி வெளியிடப்பட்ட அரசாணையை விலக்கிக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு சலுகை மற்றும் நலத்திட்ட சலுகைகளை பெறுவதற்கு இதுவரை சீர்மரபினர் சமூகங்கள் என அழைக்கப்பட்ட 68 சமூகங்கள் சீர்மரபினர் சமூகங்கள் என்றே அழைக்கப்படுவர் என தெரிவிக்கப் பட்டுள் ளது.

அதே நேரம் மத்திய அரசின் நலத்திட்ட பலன்களை பெறுவதற்கு இந்த 68 சமூகத்தினரும் சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்படுவர் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Denotified Tribes என்ற பெயரினை அரசாணை எண்:1310, சமூகநலத்துறை நாள்:30.07.1979-இல் Denotified Communities என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தற்போது Denotified Communities (சீர்மரபினர்) பட்டியலில் 68 ஜாதிகள் உள்ளன. DNC என்பதனை DNT என பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டுள்ளது. மத்திய அரசு சலுகைகள் பெறுவதற்கு ஒரு பெயரும், தமிழக ஆவணங்களிலும் ஒரு பெயரும் கூடாது. அனைத்து சலுகைகளையும் பெற சீர்மரபின பழங்குடியினர் DNT என்று ஒரே மாதிரியாக மாற்றம் செய்தால்தான் எங்களது தொடர் கோரிக்கை முழுமையாக நிறைவேறும்.

More Articles
Follows