தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘வேதாந்தா’ நிறுவனத்தின் அங்கமான ஸ்டெர்லைட் ஆலையின் 25 ஆண்டு ஒப்பந்தம், அடுத்த 2019 ஆண்டு முடிவடைகிறது.
ஆலையின் அடுத்த விரிவாக்கப் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.
இந்த ஆலையிலிருந்து வெளியாகும் நச்சுப் புகையால், சுற்றுச்சூழல் பாதிப்பும், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு, மூச்சுத்திணறல் முதல் புற்றுநோய் வரை பல நோய்கள் வருவதாகவும் கூறி, ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த போராட்டம் இன்று மட்டும் நடைபெறவில்லை.
பல அரசியல் தலைவர்களும், அவ்வப்போது இந்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் சில காலம் சூடு பிடிக்கும் இந்த போராட்டம் பின்னர் அமைதியாகும். தற்போது மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இன்று மட்டும் எந்தவொரு தலைவனின் வழிகாட்டுதலும் இல்லாமல், பொதுமக்கள் தானாகவே முன்வந்து கிட்டதட்ட 20,000-க்கும் மேற்பட்டோர் திரண்டுள்ளனர்.
இதற்கான கண்டன பொதுக்கூட்டம் அங்கு நடைபெற்று வருகிறது.
லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் இயக்குநர் அனில் அகர்வாலின் வீட்டின் முன்பு லண்டன் வாழ் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடாவிட்டால் அடுத்தக்கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் தூத்துக்குடி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் அனைத்து போராட்டங்களிலும் முதல் நடிகராக கலந்துக் கொள்ளும் ஜிவி. பிரகாஷ் ஆரம்பம் முதலே இந்த போராட்டம் குறித்த விவரங்களை தன் ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இதில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து, தன் ட்விட்டரில் அவரின் கருத்தை பதிவிட்டுள்ளார்.
Kamal HaasanVerified account @ikamalhaasan 19m19 minutes ago
ஊடகங்களும் தமிழக மக்களும் இந்த ஸ்டெர்லைட் புரட்சியில் பங்கு பெறுவது கடமை. தூத்துக்குடி மக்களுடன் நானும் உள்ளேன். புரட்சிக் களம் அழைத்தால் நான் வருவேன்.
Kamalhassan supports Thoothukudi people protest against Sterlite