தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோவை மாவட்டத்தில் உள்ள ஈச்சனாரியில் தன் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய பொருளாளர் தங்கவேல் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துக் கொண்டார்.
அந்த விழாவில் கமல் பேசியதாவது…
“என்னை பார்த்து இந்த சமூகத்தில் என்ன செய்தீர்கள் என்று கேட்டால் எனக்கு கோபம் வரும்.
நாம் நமது வேலையை செய்வோம், தேவை வரும் போது கோட்டை நோக்கி புறப்படுவோம்.
ஆனால் இப்போதுள்ள அரசியலைக் இப்படியே விட்டுவிடக் கூடாது.
ஓட்டுக்கு பணம் வாங்கிய அன்றே திருடனை அனுமதித்து விட்டீர்கள்.
வெறும் சொத்து சேத்து வைத்தால் மட்டும் போதாதது அதைக் மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
இதை திருமண விழாவாக நான் நினைக்கவில்லை. இது ஆரம்ப விழாவாக நினைக்கிறேன்.
இந்த சமூகத்தின் மீதான கோபம் அதிகரித்து கொண்டு இருக்கிறது, தொடர்ந்து போராடுங்கள். என்று பேசினார்.
அதன்பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது…
என்னை ட்விட்டர் நாயகன் என்று சொல்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய விமர்சனம்.
கோட்டையை நோக்கி நகர ஆரம்பித்து விட்டேன். ஒரு யூனியன் பிரச்சினைக்கு கூட கோட்டையே நோக்கித்தான் செல்கிறோம். அப்படி கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
போராட்டத்தை ஒரு கட்டத்தில் தொடங்கத்தான் வேண்டும். அதை தொடங்கி விட்டேன் எனவும் கமல் பரபரப்பாக பேசினார்.
Kamalhassan started his movie towards St George fort Chennai