தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
5வது புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் தலைவாஸ் அணியின் உடை அறிமுக விழா சென்னை கிண்டி அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான சச்சின் டெண்டுல்கர் கலந்துக் கொண்டார்.
மேலும் அல்லு அரவிந்த், அல்லு அர்ஜீன், ராம்சரண் தேஜா உள்ளிட்டோரும், இந்த அணியின் பிராண்ட் அம்பாஸ்டர் கமல்ஹாசனும் கலந்துக் கொண்டார்.
நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசுகையில்…
“கபடி, தமிழகத்தில் தோன்றிய விளையாட்டு என்கிற கூற்றும் உண்டு. நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக விளையாடிய விளையாட்டு இது.
நான் சிறுவயதிலேயே சினிமாவுக்கு வந்துவிட்டேன். எனவே பரமக்குடியில் கபடி விளையாடவில்லை.
இளைஞன் ஆகியும் விளையாட முடியாமல் போய்விட்டது. ஒருமுறை என் முகத்தில் அடிப்பட்டதால், இயக்குனர் கபடி ஆட கூடாது என தடைப் போட்டார்.
இந்த கபடி அணிக்கு தமிழ் தலைவா என்று பெயரிடாமல் தலைவாஸ் என்று பன்மையில் பெயரிட்டுள்ளனர்.
தலைவன் என்றால் அது ஒருவரை மட்டுமே குறிக்கும்.
எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதால் தலைவாஸ் பொருத்தமாக இருக்கிறது.
இந்த அணி வெற்றி பெற்று, இறுதி ஆட்டம் விளையாட இங்கு வரவேண்டும்” என்று பேசினார்.
அண்மையில் கமல்ஹாசனை அமைச்சர் ஒருவர் ஒருமையில் பேசியிருந்தார். எனவே கமல் இப்படி பன்மையில் பேசியது குறிப்பிடத்தக்கது.
Kamalhassan speech at Tamil Thalaivaas Jersey launch