தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இதுநாள் வரை பொறுமையாக காத்திருந்த கமல்ஹாசன் அரசியலின் ஆழம் பார்த்திட முடிவெடுத்துள்ளார்.
எனவே விரைவில் அரசியல் களம் காண்பார் என தமிழ்நாடே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு கமல் ஜோதிடம் பார்ப்பது போன்ற நிகழ்வு இருந்தது.
அப்போது கமல் ரசிகை ஒருவர் “கிளி ஜோசியம் போல கமல் ஜோசியம் தமிழ்நாட்டில் பிரபலம்.
அதை நம்பி நிறைய பேர் காத்திருக்கிறோம். அந்த ஜோசியத்தில் நீங்கள் ‘ம்ம்ம்ம்ம்’ என்ற வார்த்தை மட்டும் சொன்னால் போதும். மத்த எல்லாம் ரெடி” என்றார்.
அதற்கு பதிலளித்த கமல், “ஏற்கெனவே ட்விட்டரில் நான் பேசுவது பலருக்கு புரியவில்லை என சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பார்க்கலாம் என்றால் அனைவரும் கையைத் தூக்குங்கள்” என்றவுடன் பார்வையாளர்கள் அனைவரும் கையைத் தூக்கினார்கள்.
இப்படித் தூக்கக் கூடாது என (ஓட்டுப் போடும்போது மை வைக்கும் விரலைக் மட்டும் காட்டியபடி) இப்படித் தூக்க வேண்டும்.
நேரம் வரும் போது இந்த விரலில் மை இருக்கனும். சிந்தித்து ஓட்டு போடவேண்டும். விரலில் மட்டும் கறை இருக்கனும். வேறெங்கும் இருக்கக் கூடாது. அதுதான் நம் எதிர்காலம்” என்றார் கமல்.
Kamalhassan speech about Vote and Future of Nation