தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு இருக்கிறது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு 2 நாட்களாக பரவி வருகிறது.
அதனை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடூபட்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட கோவை, ஈரோடு மாணவிகள் வந்துள்ளனர்.
மொத்தம் 40 மாணவ, மாணவிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தீவிபத்தில் சிக்கியவர்கள் சென்னை மாணவிகள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஐடி ஊழியர்கள் சிலரும் இந்த தீ விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.
காட்டுத் தீயில் சிக்கிய 21 மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது.
இந்த தீ விபத்தில் இதுவரை 9 பேர் இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
அவர்களது சடலங்களை ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து நடிகரும் அரசியல்வாதியுமான கமல் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…
Kamal HaasanVerified account @ikamalhaasan
குரங்கணி விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்
Kurangani forest fire and its victims is heart rending. Those with burn injuries should heal fast. I wish them all the best for recovery and rehabilitation. To those bereived families my deepest sympathy.
Kamalhassan reaction to Kurangani hills fire accident