தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எட்டுவயது சிறுமி ஆஷிஃபா கடந்த ஜனவரி 10 ஆம் தேதி காணாமல் போனாள்.
அதன்பின்னர் ஒருவாரத்திற்குப் பிறகு ரசனா என்ற வனப்பகுதியில் இருந்து அவளின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், ஒரு சிறுவன் உட்பட 8 பேர் சேர்ந்து அவளை ஒரு கோயிலில் மறைத்து வைத்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
அந்த இளம் சிறுமிக்கு உணவு கூட தராமல் மயக்கத்திலேயே வைத்திருந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதற்காக அவர்கள் பயன்படுத்திய மருந்தால், அவளது இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான 18 வயது நிரம்பாத ஒருவன்தான் இந்த சிறுமியை அடித்து கொலை செய்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த கற்பழிப்பு கொடுமை இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனும் தன் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
அவரின் ட்விட்டர் பதிவில்….
ஒரு மனிதனாக தந்தையாக குடிமகனாக நான் தோற்றதற்காக கோவப்படுகிறேன். என்னை மன்னித்து விடு ஆஷிபா.
இந்த நாட்டில் உனக்கு நாங்கள் போதுமான பாதுகாப்பை கொடுக்க தவறிட்டோம்.
உன்னே போன்ற குழந்தைகளின் உரிமைக்காக நீதிக்காக நான் போராடுவேன்.” என தெரிவித்துள்ளார்.
Kamalhassan reaction Asifa rape murder case
Kamal HaasanVerified account @ikamalhaasan 5m5 minutes ago
Does it have 2 b ur own daughter fr u 2 understand? She could’ve been mine. I feel angry as a man, father & a citizen fr failing Asifa. I m sorry my child v didn’t make this country safe enough fr U. I’ll fight fr justice at least fr future kids like u. V mourn u & won’t forget u