தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து தன் அரசியல் பயணத்தை தொடங்கினார் நடிகர் கமல்ஹாசன்.
அதைத்தொடர்ந்து ராமேசுவரம் மீனவர்களைச் சந்தித்து பேசினார்.
பிறகு கலாமின் நினைவு இடத்தில் அவரது சமாதிக்கு மாலை அணிவித்து மலர்தூவி வணங்கினார்.
அங்கிருந்து பயணத்தை தொடர்ந்த அவருக்கு ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து பொதுமக்களிடையே சிறிது நேரம் பேசினார்.
அதன் பின்னர் மதுரையில் உள்ள ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு கமல்க்கு வந்தார்.
அவரது இயக்கத்தின் மாவட்டச் செயலர்கள் வரிசையாக நின்று வரவேற்க கட்சிக் கொடியை ஏற்றினார்.
கட்சி கொடியில் சிவப்பு, வெள்ளை கைகள் இணைந்திருக்க கருப்பு நிறத்தின் நடுவே ஒரு வெள்ளை நட்சத்திரம் இடம்பெற்றுள்ளது.
பின்னர் தனது கட்சியின் பெயரை ‘மக்கள் நீதி மய்யம்’ என்று அறிவித்தார்.
இந்நிலையில், கட்சிக்காக மய்யம்.காம் என்ற அதிகாரபூர்வ இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
Kamalhassan new political party titled Makkal Needhi Maiam