தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக நாயகன் கமல்ஹாசன் அண்மைகாலமாக தன் ட்விட்டரில் சமுமூகம் சார்ந்த கருத்துக்களை அதிகமாக பதிவிட்டு வருகிறார்.
இதனால் மக்களிடையே ஆதரவும், சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
இதனால் பாஜகவின் முக்கிய பிரமுகர் சுப்ரமணிய சுவாமிக்கும் கமலுக்கு இடையே ‘பொறுக்கி’ என்ற வார்த்தை போரே நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கமல்ஹாசன் நாளை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அப்போது, சினிமா, பொது விஷயங்கள் பற்றியும், தன் மீதான இணையத்தள விமர்சனங்களும் பற்றியும் கலந்து பேச உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஒருவேளை, இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சினிமா உலகிலும் அரசியல் உலகிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Kamalhassan meeting with Leading Lawyers