தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் விவசாய சங்க ஒருங்கிணைப்பு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…
என்னைப் பார்த்து, ட்விட்டரில் இருந்து சாக்கடை அள்ள வாருங்கள் என்கிறார்கள். ஒரு ஆள் எத்தனை சாக்கடைகளை அள்ள முடியும்.
அருகில் உள்ள கேரளா மாநிலம் கூட நாம் சோறு போடுவோம் என காத்து கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளுடன் கைகோர்க்க நான் இங்கு வந்துள்ளேன்.
சினிமா இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் இருக்க முடியாது.
நான் பகுத்தறிவாளன். கடவுள் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள்.
நீங்கள் அத்துடன் சேர்ந்து புதிய கடவுள் ஒன்றையும் வணங்க வேண்டும்.
மழை, ஏரி, ஆறுகளை வணங்க கற்றுக் கொள்ளுங்கள்.” என்று கமல் பேசினார்.
Kamalhassan introduced New God and asked farmers to worship