தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் வீதிக்கு வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
சாலை ஓரங்களில் வசிக்கும் மக்கள் மற்றும் தினக்கூலியை நம்பியிருக்கும் மக்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு அரசு உதவிகள் செய்தாலும் அது போதுமானதாக இல்லை. மேலும் அது நிறைய மக்களை சென்றயடையவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் தொண்டுள்ளம் கொண்டவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தங்கள் இயன்ற உதவிகளை தினம் செய்து வருகின்றனர்.
காய்கறி, அரிசி, மளிகை பொருட்களை ஏழைகளுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.
திமுக கட்சினர், ரஜினி மக்கள் மன்றத்தினர், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களின் ரசிகர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்த வண்ணம் உள்ளனர்.
தற்போது வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு தனியார் அமைப்புகள் நேரடியாக உதவி செய்வதற்கு தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உதவி செய்ய நினைப்பவர்கள், முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பும்படியும், உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்…
“அண்டை மாநிலங்கள் சில COVID19 உடன் போராட தனியார், இளைஞர், ஓய்வு பெற்ற மருத்துவர் எனப் பலரின் உதவியை நாடிப் பெறுகின்றனர். என் அரசு ஏழைக்கு உதவுபவன் கையைத் தட்டி விடுகிறது. வேலைதெரிந்த நம் ஆட்சியரை வேலை செய்ய விடும் அமைச்சர்காள். This is no time for commision or omission. People are watching
Kamal slams TN CM for his order in stop volunteers help in lock down