தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல தமிழ் வார இதழில் கமல்ஹாசன் எழுதி வரும் தொடர் கட்டுரையில், இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்று தெரிவித்திருந்தார்.
மேலும் அந்தக் கட்டுரையில், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர்.
ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டடனர் என்று கூறி உள்ளார்.
இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்றும் கமல்ஹாசன் அந்தக் கட்டுரையில் கூறி இருந்தார்.
அவரின் இந்த கருத்துக்கு பா.ஜனதா மற்றும் சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து இந்து மகா சபா அமைப்பின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா கூறியதாவது…
இந்துக்களின் மன உணர்வை காயப்படுத்துபவர்கள் இந்த மண்ணில் வாழக்கூடாது.
கமலை சுட்டுக் கொல்லனும். அப்போதுதான் மற்றவர்களுக்கு இது பாடமாக அமையும்.
கமல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடிக்கும் படங்களை இந்துக்கள் பார்க்கக் கூடாது. அந்த படங்களை புறக்கணிக்க வேண்டும்.
இந்து மத உணர்வுகளை புண்படுத்தியவர்களுக்கு மன்னிப்பே கிடையாது” என கூறியுள்ளார்.
Kamal should be shot dead for his Hindu Terror remark says Hindu Mahasabha