ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்கிறதா..? கமல் தந்த நெத்தியடி பதில்

ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்கிறதா..? கமல் தந்த நெத்தியடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Modi Rajini
அடுத்தாண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தன் அரசியல் பிரசாரத்தை மதுரையில் தொடங்கி வைத்தார் கமல்ஹாசன்.

மதுரையில் பல்வேறு இடங்களுக்கு சென்றார். பொதுக்கூட்டம் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்திப்பை நிகழ்த்தினார் கமல்.

அவர் பேசும்போது…” இந்த சட்டசபை தேர்தலில் நான் கட்டாயம் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

மேல்மட்டத்தில் இருந்து தொடரும் ஊழலை ஒழிப்போம். எனக்கு வரும் கூட்டத்தை பார்த்து அமைச்சர்கள் உறக்கம் இல்லாமல் உள்ளனர்.

ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்கிறதா? என்ற கேள்விக்கு கமல் பதிலளிக்கையில்… ” ரஜினியை வைத்து பாஜக அரசியல் செய்யமாட்டார்கள்.

ரஜினியை வைத்து சினிமா வேண்டுமானால் செய்வார்கள்” என பதிலளித்தார் கமல்ஹாசன்.

Kamal responds to Rajini and BJP politics

எம்ஜிஆர் ஆசையை நிறைவேற்றுவேன்.. அடுத்த புரட்சி ஆரம்பம்..; மதுரையில் கமல் பேச்சு

எம்ஜிஆர் ஆசையை நிறைவேற்றுவேன்.. அடுத்த புரட்சி ஆரம்பம்..; மதுரையில் கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அடுத்தாண்டு 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எனவே இப்போதே மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் கமல்ஹாசன்.

மதுரையில் மேல மாசி வீதியில் தொண்டர்கள் மத்தியில் பிரசார பயணத்தை தொடர்ந்தார்.

அவர் செல்லும் வழியில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் உற்சாகமாக குரல் எழுப்பினர்.

பின்னர் பொதுக்கூட்டத்தில் கமல் பேசினார்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மதுரையை 2 வது தலைநகரமாக. மாற்ற ஆசைப்பட்டார். அதன் நீட்சி தான் நான்.

மாற்றம் ஏற்படுத்துவோம்.. மநீம ஆட்சிக்கு வந்தால் மதுரையை 2 வது தலைநகரமாக மாற்றுவோம்.

மீண்டும் ஒரு புரட்சிக்கு தயாராக வேண்டும். அதன் ஆரம்பம் தான் இந்த விழா” என பேசினார் கமல்ஹாசன்.

Kamal promised to fulfil MGR’s wish

‘அண்ணாத்த’ சூட்டிங் ஸ்பாட்.. ஐஸ்வர்யா தனுஷ் ஷர்ட்டில் ரஜினி போட்டோ..; வைரலாகும் போட்டோஸ்

‘அண்ணாத்த’ சூட்டிங் ஸ்பாட்.. ஐஸ்வர்யா தனுஷ் ஷர்ட்டில் ரஜினி போட்டோ..; வைரலாகும் போட்டோஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

12-12-2020 அன்று தன் பிறந்தநாளை கொண்டாடினார் நடிகர் ரஜினிகாந்த்

அப்போது தன் பிறந்தநாளில் ‘Now Or Never’ (இப்போ இல்லானே எப்பவுமே இல்ல) என எழுதப்பட்ட கேக்கை ரஜினி வெட்டி கொண்டாடியது வைரலானது.

இதனையடுத்து ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயாராகி வந்தார் ரஜினிகாந்த்.

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்ட அண்ணாத்த பட சூட்டிங் இன்றுமுதல் தொடங்கிவிட்டது.

இதில் நடிக்கும் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டுச் சென்றனர்.

அப்போது விமான பணியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் ரஜினி.

‘அண்ணாத்த’ ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது கேரக்டருக்கான விக் வைத்த மேக்கப் உடன் ஸ்டைலாக ரஜினி அமர்ந்திருக்கும் போட்டோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதில் ரஜினிகாந்த் உடன் அவரது மகள் ஐஸ்வர்யா தனுஷூம் அமர்ந்திருக்கிறார்.

அவருடைய ஷர்ட்டில் ரஜினி படம் இடம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

கொரோனா காலம் என்பதால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 29-ம் தேதி சென்னை திரும்பும் ரஜினிகாந்த் டிசம்பர் 31-ம் தேதி கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rajini and Aishwarya in perfect father-daughter pic from Annaatthe shoot goes viral

ட்விட்டரில் பேசப்பட்ட தென்னிந்திய படங்கள்.: ரஜினி லாஸ்ட்.. விஜய் பர்ஸ்ட்… அஜித் 3.. சூர்யா 5..

ட்விட்டரில் பேசப்பட்ட தென்னிந்திய படங்கள்.: ரஜினி லாஸ்ட்.. விஜய் பர்ஸ்ட்… அஜித் 3.. சூர்யா 5..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Vijay Ajith Suriya2020 ஆண்டில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட 10 தென்னிந்திய படங்களின் பட்டியலை ட்விட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அண்மையில் 2020-ம் ஆண்டில் அதிகம் ரீ-ட்வீட் செய்யப்பட்டதாக விஜய்யின் செல்ஃபி போட்டோ இடம்பெற்றது.

2020 ட்ரெண்டிங்கில் சூரரைப்போற்று ஹேஷ்டேக் இந்திய அளவில் 2ம் இடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில் 2020-ம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட 10 தென்னிந்திய படங்களின் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

அதில் முதல் இடத்தில் மாஸ்டர் திரைப்படம் உள்ளது. 2வது இடத்தில் வக்கீல் சாப் படமும், 3வது இடத்தில் வலிமையும், 5-வது இடத்தில் சூரரைப்போற்று படமும் உள்ளது.

ராஜமவுலியின் RRR படத்துக்கு 6-வது இடம் கிடைத்துள்ளது.

ரஜினிகாந்தின் ‘தர்பார்’ படம் 10-வது இடத்தை பிடித்துள்ளது.

Here are complete details about Most Tweeted Movies in 2020

மச்சான் ஹரி இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கும் அருண் விஜய்

மச்சான் ஹரி இயக்கத்தில் முதன்முறையாக நடிக்கும் அருண் விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arun vijay‘சாமி’, ‘அருள்’, ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘சி 3’ பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஹரி.

இதனையடுத்து சூர்யா நடிப்பில் உருவாகும் ‘அருவா’ படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருந்தார் ஹரி.

ஆனால் அந்த படம் கைவிடப்பட்டது.

தற்போது முதன்முறையாக தன் மச்சான் அருண் விஜய்யை இயக்கவுள்ளார் ஹரி.

இந்த படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்சன் சார்பாக சக்திவேல் & அருண்குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

அருண் விஜய்யின் சகோதரி ப்ரீதா விஜயகுமாரின் கணவர்தான் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது.

Arun Vijay’s next film with director Hari

சீனுராமசாமி & விஜய்சேதுபதி இணைந்த ‘மாமனிதன்’ படத்திற்கான தடையை நீக்கியது ஐகோர்ட்

சீனுராமசாமி & விஜய்சேதுபதி இணைந்த ‘மாமனிதன்’ படத்திற்கான தடையை நீக்கியது ஐகோர்ட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maamanithanசீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி & காயத்ரி இணைந்துள்ள படம ‘மாமனிதன்’.
இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இசையமைத்துள்ளனர்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

விரைவில் படம் திரைக்கு வர உள்ள நிலையில் ஐகோர்ட்டில் அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில்…

“மாமனிதன்” திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் தாங்கள் வாங்கியதாகவும் எனவே விநியோக உரிமை தங்களுக்குத் தராமல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த மெட்ராஸ் ஐகோர்ட் நீதிபதி கார்த்திகேயன், மாமனிதன் படத்திற்கு இடைக்கால தடை உத்தரவு அளித்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது.. தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா சார்பில் ஆஜராகால் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன்.

அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா விநியோக உரிமை தொடர்பாக எந்த உரிமையும் கோரவில்லை.

அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் எனவே படத்திற்கான தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

இதன் பின்னர் இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ‘மாமனிதன்’ படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.

எனவே விரைவில் மாமனிதனை திரையில் எதிர்ப்பார்க்கலாம்..

Madras high court allows releasing of Vijay Sethupathi’s Maamanithan

More Articles
Follows