தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மழையால் தேங்கி நிற்கும் பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி, காவல்துறை, தீயணைப்பு வீரர்களும் இணைந்து உதவிகளை செய்து வருகிறார்கள்.
வேப்பேரி இன்ஸ்பெக்டர் வீரக்குமார், சாக்கடை அடைப்பை வெறும் கையால் அகற்றிய புகைப்படம் வைரலாக வருகிறது
இந்நிலையில் இதுபோன்ற ஒரு படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன்…
தங்கள் பணியையும் தாண்டிச் செல்வோருக்கு நன்றி. சீருடையோடும், இல்லாமலும் கூட நல்ல குடிமக்கள் மிளிருவார்கள். மேலும் பல தமிழர்களும் இதுபோல வேலையையும் தாண்டிய பணிகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு ஒரு டிவிட்டில் கமல் கூறியுள்ளார்.
Thanks for going beyond the call of your duty. Good citizens shine with or without uniform. More similar Thamizhan’s should report to duty pic.twitter.com/54StA3CEq0 — Kamal Haasan (@ikamalhaasan) November 4, 2017
மேலும் மற்றொரு பதிவில் “இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை” என தெரிவித்துள்ளார்.
Kamal request peoples to support Govt Staffs during Chennai rain rescue
Kamal HaasanVerified account @ikamalhaasan 38m38 minutes ago
இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை.