அரசுப் பணியாளர்களை கேலி செய்யாமல் உதவுங்கள்… கமல்

அரசுப் பணியாளர்களை கேலி செய்யாமல் உதவுங்கள்… கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal request peoples to support Govt Staffs during Chennai rain rescueசென்னை உள்ளிட்ட தமிழக மாவட்டங்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மழையால் தேங்கி நிற்கும் பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி, காவல்துறை, தீயணைப்பு வீரர்களும் இணைந்து உதவிகளை செய்து வருகிறார்கள்.

வேப்பேரி இன்ஸ்பெக்டர் வீரக்குமார், சாக்கடை அடைப்பை வெறும் கையால் அகற்றிய புகைப்படம் வைரலாக வருகிறது

இந்நிலையில் இதுபோன்ற ஒரு படத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன்…

தங்கள் பணியையும் தாண்டிச் செல்வோருக்கு நன்றி. சீருடையோடும், இல்லாமலும் கூட நல்ல குடிமக்கள் மிளிருவார்கள். மேலும் பல தமிழர்களும் இதுபோல வேலையையும் தாண்டிய பணிகளில் ஈடுபட வேண்டும். இவ்வாறு ஒரு டிவிட்டில் கமல் கூறியுள்ளார்.

Thanks for going beyond the call of your duty. Good citizens shine with or without uniform. More similar Thamizhan’s should report to duty pic.twitter.com/54StA3CEq0 — Kamal Haasan (@ikamalhaasan) November 4, 2017

மேலும் மற்றொரு பதிவில் “இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை” என தெரிவித்துள்ளார்.

Kamal request peoples to support Govt Staffs during Chennai rain rescue

Kamal Haasan‏Verified account @ikamalhaasan 38m38 minutes ago
இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக்கால உதவிகள் செய்கையில் அரசுப் பணியாளர்களுக்கு இடைஞ்சலோ கேலியோ இன்றி உதவுங்கள். ஆபத்திற்கு பாவமில்லை.

 

15 வருட நிறைவை கொண்டாடும் விஜய்-அஜித்-சிம்பு ரசிகர்கள்

15 வருட நிறைவை கொண்டாடும் விஜய்-அஜித்-சிம்பு ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Ajith Simbu fans celebrating 15 years of hit moviesமுன்பெல்லாம் சினிமா ரசிகர்கள் தங்கள் அபிமான நடிகரின் பிறந்தநாளை கொண்டாடுவார்கள். அதன்பின்னர் படங்கள் ரிலீசாகும் அன்று திருவிழா போல் கொண்டாடுவார்கள்.

ஆனால் கடந்த 7 வருடங்களாக ஒரு படம் ரிலீசான நாளை முன்னிட்டு ஒரு வருடம், இரண்டு வருடம் என கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

எந்திரன் படம் வெளியான நாளை முன்னிட்டு முதலாண்டு விழா என ரஜினி ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

தற்போது இது எல்லா தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று அஜித் நடித்த வில்லன் திரைப்படத்தின் 15 வருட நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

இவர்களைப் போல் விஜய் நடித்த பகவதி படத்தின் 15 வருட நாளையும் கொண்டாடி வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து சிம்பு நடித்த காதல் அழிவதில்லை என்ற படத்தின் 15 வருட நாளையும் ரசிகர்கள் ஹேஷ்டேக் கிரியேட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

இது சிம்பு ஹீரோவாக அறிமுகமான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijay Ajith Simbu fans celebrating 15 years of hit movies

கமலை கொல்லனும்; அவர் படத்தை பார்க்கக் கூடாது… இந்து மகாசபா

கமலை கொல்லனும்; அவர் படத்தை பார்க்கக் கூடாது… இந்து மகாசபா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hindu-mahasabhaபிரபல தமிழ் வார இதழில் கமல்ஹாசன் எழுதி வரும் தொடர் கட்டுரையில், இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்று தெரிவித்திருந்தார்.

மேலும் அந்தக் கட்டுரையில், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர்.

ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டடனர் என்று கூறி உள்ளார்.

இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்றும் கமல்ஹாசன் அந்தக் கட்டுரையில் கூறி இருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு பா.ஜனதா மற்றும் சிவசேனா தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து இந்து மகா சபா அமைப்பின் துணைத் தலைவர் பண்டிட் அசோக் சர்மா கூறியதாவது…

இந்துக்களின் மன உணர்வை காயப்படுத்துபவர்கள் இந்த மண்ணில் வாழக்கூடாது.

கமலை சுட்டுக் கொல்லனும். அப்போதுதான் மற்றவர்களுக்கு இது பாடமாக அமையும்.

கமல் மற்றும் அவரது குடும்பத்தினர் நடிக்கும் படங்களை இந்துக்கள் பார்க்கக் கூடாது. அந்த படங்களை புறக்கணிக்க வேண்டும்.

இந்து மத உணர்வுகளை புண்படுத்தியவர்களுக்கு மன்னிப்பே கிடையாது” என கூறியுள்ளார்.

Kamal should be shot dead for his Hindu Terror remark says Hindu Mahasabha

சிம்பு-சந்தானம் கூட்டணியில் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்

சிம்பு-சந்தானம் கூட்டணியில் பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Harish Kalyan crooned in Simbu music for Sakka Podu Podu Rajaநடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக திறமைக் கொண்ட சிம்பு முதன்முறையாக இசையைமப்பாளர் அறிமுகமாகியுள்ள படம் ‘சக்க போடு போடு ராஜா’.

இப்படத்தை ‘விடிவி’ கணேஷ் தயாரிக்க, சேதுராம் இயக்கியுள்ளார்.

சந்தானம், வைபவி சாண்டில்யா, விவேக், ரோபோ சங்கர், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ‘சக்க போடு போடு ராஜா’விற்கான டைட்டில் பாடலை ஹரிஷ் கல்யாண் பாடியிருக்கிறாராம்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீடு அண்மையில் நடந்து முடிந்த நிலையில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Harish Kalyan crooned in Simbu music for Sakka Podu Podu Raja

நான் சொன்னா அதை செய்ய 5 லட்சம் பேர் உள்ளனர்… கமல் பேச்சு

நான் சொன்னா அதை செய்ய 5 லட்சம் பேர் உள்ளனர்… கமல் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

5 Lakhs peoples are there to do my words into action says Kamalசென்னையில் விவசாய சங்க ஒருங்கிணைப்பு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் கலந்துக் கொண்ட கமல்ஹாசன் பேசியதாவது…

நான்உழவன் மகன் இல்லை. ஆனால் உழவனின் மருமகன்.

நான் ஓட்டு சேகரிக்க இங்கு வரவில்லை. நான் தமிழகத்திற்கு சோறு சேகரிக்க வந்துள்ளேன்.

டெல்லியைச் சேர்ந்த ஒருவர் என்னை பொறுக்கி என்றார். அறிவு, ஞானத்தை நான் எங்கு வேண்டுமானாலும் பொறுக்குவேன்.

திருடனை நாம் துரத்தும்போது அவன் நம்மை எதிர்த்து கேள்வி கேட்கும் நிலைதான் இன்று உள்ளது.

எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்தான் என்பதை மறந்து விட்டீர்கள்.

தமிழகமும் மராட்டியமும்தான் இந்தியாவில் அதிகளவில் வரி கட்டும் மாநிலங்களாக உள்ளது.

மற்ற மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஹைட்ரோ கார்பனை விட விவசாயம் மிகவும் முக்கியமானது.

கிணறு இன்று தற்கொலை செய்யும் இடமாக மாறிவிட்டது.

ஒரு ஆற்றையே காணாமல் போக செய்துவிட்டார்கள் அரசு அதிகாரிகள்.

குளங்களை, ஏரிகளை சரிசெய்ய நான் இணைவேன்.

நான் சொல்வதை செய்வதற்கு 36 ஆண்டுகளாக 5 லட்சம் பேர் உள்ளனர்.

அவர்கள் குழுவாக பிரிந்து விவசாயிகளை சந்தித்து உதவிக்கு வருவார்கள்.” இவ்வாறு பேசினார் கமல்ஹாசன்.

5 Lakhs peoples are there to do my words into action says Kamal

புதிய கடவுளை அறிமுகப்படுத்தி வணங்க சொன்ன கமல்ஹாசன்

புதிய கடவுளை அறிமுகப்படுத்தி வணங்க சொன்ன கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan introduced New God and asked farmers to worshipசென்னையில் விவசாய சங்க ஒருங்கிணைப்பு கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…

என்னைப் பார்த்து, ட்விட்டரில் இருந்து சாக்கடை அள்ள வாருங்கள் என்கிறார்கள். ஒரு ஆள் எத்தனை சாக்கடைகளை அள்ள முடியும்.

அருகில் உள்ள கேரளா மாநிலம் கூட நாம் சோறு போடுவோம் என காத்து கொண்டிருக்கிறார்கள்.

விவசாயிகளுடன் கைகோர்க்க நான் இங்கு வந்துள்ளேன்.

சினிமா இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் மக்கள் இருக்க முடியாது.

நான் பகுத்தறிவாளன். கடவுள் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் நீங்கள் கடவுளை நம்புகிறீர்கள்.

நீங்கள் அத்துடன் சேர்ந்து புதிய கடவுள் ஒன்றையும் வணங்க வேண்டும்.

மழை, ஏரி, ஆறுகளை வணங்க கற்றுக் கொள்ளுங்கள்.” என்று கமல் பேசினார்.

Kamalhassan introduced New God and asked farmers to worship

More Articles
Follows