தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தராக கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகத்திற்கு தமிழரை நியமித்து இருக்கலாமே என இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
துணைவேந்தராக நியமிக்க தமிழகத்தில் தகுதியான பேராசிரியர்கள் இல்லையா? கர்நாடகாவை சேர்ந்தவரை துணைவேந்தராக நியமிப்பது தமிழக உரிமையை பாதிப்பதுபோல் உள்ளது எனவும் கண்டனங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தன் ட்விட்டர் பதிவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் துணை வேந்தர் நியமனத்தை கண்டிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவுகள்…
Kamal HaasanVerified account @ikamalhaasan 55m55 minutes ago
We asked for water from Karnataka and we get a vice-chancellor from Karnataka instead. The gulf between people and the government cannot be more obvious. Are they taunting us so we react adversely? I wonder what their game plan is
Kamal HaasanVerified account @ikamalhaasan 36m36 minutes ago
கர்நாடகத்திலிருந்து காவிரித் தண்ணீர் கேட்டால் துணைவேந்தரை அனுப்பி வைக்கிறார்கள். தமிழக மக்களின் மனநிலையை மத்திய மாநில அரசுகள் உணரவில்லையா? இல்லை உணரத்தேவையில்லை என எண்ணி விட்டார்களா? சீண்டுகிறார்கள். இந்தச் சீண்டல் எதை எதிர்பார்த்துச் செய்யப்படுகிறது?