தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளதாவது…
“ஸ்டெர்ட்லைட் ஆலைக்கு எதிராக நீதிக் கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள்.
அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம்.
இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை. அவர்கள் எப்பொழுதும் உயிர் இழக்கிறார்கள். முன்பு ஆலையினால், இப்பொழுது ஆணையினால். அனைவரும் அமைதிக் காக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தற்போது சற்றுமுன் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அப்போது அவர் கூறியதாவது..
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை தவிர வேறு வழியில்லை எனவும் அவர் கூறினார்.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி அளித்தது யார்? அமைதி காக்க வேண்டியது மக்கள் மட்டுமல்ல; அரசும்தான். மக்களின் போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும் எனவும் கமல் தெரிவித்தார்.
Kamal questioning who gave permission to shoot at Sterlite Protest