தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இரண்டு மனைவிகளை பிரிந்த பின் நடிகை கௌதமியை திருமணம் செய்யாமல் அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் கமல்ஹாசன்.
இந்த ஜோடி கிட்டதட்ட 12 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், திடீரென கமலை விட்டு பிரிகிறேன். தனது மகளின் எதிர்காலத்திற்காக இந்த முடிவை எடுக்கிறேன் என கவுதமி குறிப்பிட்டு பிரிந்தார்.
தற்போது மீண்டும் அவர்கள் இணைய வாய்ப்புள்ளதாக வந்த செய்திகளை கவுதமி மறுத்துள்ளார்.
மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் தன் வலைதளத்தின் லிங்கை ஷேர் செய்துள்ளார். அதில் ஒரு கடிதத்தை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கமல்ஹாசனுடன் சேர்ந்து வாழ்ந்த காலங்களில் அவரின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த படங்களில் உடை அலங்கார நிபுணராக பணியாற்றினேன்.
விஸ்வரூபம், தசாவதாரம் போன்ற பல படங்களுக்கும் உடை அலங்கார பணிகளை செய்துள்ளேன்.
ஆனால், அதற்கு தர வேண்டிய சம்பளம் முழுமையாக தரப்படவில்லை.
இது தொடர்பாக பல தடவை நினைவுபடுத்தி தகவல் அனுப்பியிருக்கிறேன்.
ஆனாலும், சம்பளம் வழங்கப்படவில்லை.
இதனால் பொருளாதார ரீதியாக எனக்கு பாதிப்பு ஏற்படுகிறது.”
என தன் கஷ்ட சூழ்நிலையை அதில் குறிப்பிட்டுள்ளார் நடிகை கவுதமி.
Kamal have to give pending salary for my work says Gautami
https://gautamitadimalla.wordpress.com/2018/02/24/past-is-past-and-there-are-reasons-for-it/