தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2021 நவம்பரில் அமெரிக்கா சென்று திரும்பினார் நடிகர் கமல்ஹாசன்.
திரும்பிய நாள் அன்றே நவம்பர் 22ம் தேதியன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் கமல்.
எனவே, சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா நம்மை விட்டு ஓடவில்லை. இங்கே தான் இருக்கிறது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தினார் கமல்ஹாசன்.
இவர் ஆஸ்பத்திரியில் இருந்த காலத்தில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
பின்னர் தீவிர சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து நேராக கமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
தமிழக சுகாதாரத்துறையும் கமலிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது.
இதன்பின்னரும் கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
105 நாட்கள் நடைபெற்ற நிலையில் நேற்று ஜனவரி 16 பிக்பாஸ் சீசன் 5 இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் ராஜூ வின்னராக அறிவிக்கப்பட்டு வெற்றிக்கோப்பையும் 50 லட்சத்திற்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.
பிரியங்கா இரண்டாவதாகவும், பாவ்னி மூன்றாவதாகவும் இந்த போட்டியில் வெற்றி பெற்றனர்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தன்னுடைய நினைவு பரிசை வழங்கினார் கமல். ராஜூவுக்கு பேனா, பிரியங்காவுக்கு மைக் ட்ராஃபி, நிரூப்க்கு தொப்பி, அமீருக்கு ஷூ, பாவ்னிக்கு கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்பட்டன.
பிக்பாஸ் 5 சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், சென்னை போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது வழக்கமான பரிசோதனை தான்.. இன்று மாலைக்குள் வீடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Kamal Hassan admitted to Ramachandra Hospital for check-up