தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று காந்தி ஜெயந்தி. இந்த நாளில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை கொரோனா தொற்றை காரணம் காட்டி கிராம சபைக் கூட்டங்களுக்கு தடை விதித்துள்ளது அரசு.
அதுகுறித்து கமல்ஹாசன் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது..
கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன ? கொரோனா கால செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா? அல்லது மக்கள் நீதி மய்யம் கொண்டுவிடும் என்ற நடுக்கமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? நாளை எமதே!
பாருக்குள்ளே நல்ல நாடுதான்… நம்பியதில் பிசகில்லை. நாட்டை நாசமாக்கும் நயவஞ்சகர்களை அகற்றிவிட்டால், நாளைய குழந்தைகளேனும் எங்கள் பாரத தேசம் என்று தோள் கொட்டும். ஜெய்ஹிந்த்!
என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பதிவில் தன் 2வது மகள் அக்சராஹாசன் குழந்தை பருவத்தில் பாடிய நாட்டுப்பற்று பாடலை பதிவிட்டுள்ளார்.
Happy Bday to Mr. MK Gandhi. Sharing what
@Iaksharahaasan
had sung for me when she was a child. Calling all Indians to remember the great man whose life was his message to us! Let’s make India a place where Equality prevails-sare jahan se achcha, Gandhi’s India can still be ours!
Kamal Haasan warns Tamilnadu Government