ட்விட்டர் தளம் டூ அரசியல் களம்; மக்கள் குறைகளை கேட்டறிந்தார் கமல்

ட்விட்டர் தளம் டூ அரசியல் களம்; மக்கள் குறைகளை கேட்டறிந்தார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor kamal haasanஅண்மைக்காலமாக ட்விட்டரில் அரசியல் குறித்த பதிவுகளை அதிரடியாக பதிவிட்டு வந்தார் கமல்ஹாசன்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர், ட்விட்டர் தளத்தை விட்டு அரசியல் களத்திற்கு வந்து பணியாற்ற சவால் விட்டனர்.

இதனையடுத்து இன்று அதற்கான பணிகளில் இறங்கியுள்ளார் கமல்ஹாசன்.

அதன் விவரம் வருமாறு….

கொசஸ்தலை ஆற்றின் கழிமுகத்துவாரப் பகுதியில் வல்லூர் அனல்மின் நிலைய சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டதை நாம் நேற்று வடசென்னைக்கு ஆபத்து என்ற பெயரில் பார்த்தோம்.

இந்நிலையில் இன்று அதிகாலை எண்ணூர் துறைமுகப் பகுதிகளை நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்கு சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்களிடம் கமல்ஹாசன் கேட்டறிந்தார்.

சுற்றுச் சூழல் ஆர்வலர் நித்யானந்தா ஜெயராமனும் கமல்ஹாசனுடன் சென்று பாதிப்புகள் குறித்து விவரித்தார்.

இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தமக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு ட்விட்டரில் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

சகோதரர் திருமாவளவன் மற்றும் பொன்னார் போன்றோர் எனக்களித்த வரவேற்ப்புரைக்கு நன்றி. முன்னோடுவோரின் வாழ்த்துக்கள் என் ஊக்கத்தை கூட்டுகிறது” என பதிவிட்டுள்ளார்.

— Kamal Haasan (@ikamalhaasan) October 28, 2017

மீண்டும் தன் வேலையை தொடங்கிய வேலைக்காரன்

மீண்டும் தன் வேலையை தொடங்கிய வேலைக்காரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan nayantharaமோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்துள்ள வேலைக்காரன் படம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி பிரச்சினைகளால் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக படக்குழுவினர் ராஜஸ்தான் சென்றுள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இதன் ஒளிப்பதிவாளராக ராம்ஜி பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இதுநாள் வரை பணியாற்றிய படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷனை மாற்றி எடிட்டராக ரூபனை ஒப்பந்தம் செய்து இருக்கிறார்களாம்.

After some issues Velaikkaran shooting starts at Rajasthan

சூர்யாவுடன் மோதும் அஜித் ரசிகர் ஆர்கே. சுரேஷ்

சூர்யாவுடன் மோதும் அஜித் ரசிகர் ஆர்கே. சுரேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rk sureshவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படம் தானா சேர்ந்த கூட்டம்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தின் மற்ற பாடல்கள் மற்றும் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை அடுத்த ஆண்டு 2018 பொங்கல் தினத்தில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதே நாளில் ஆர். கே. சுரேஷ் நடித்துள்ள பில்லா பாண்டி படத்தையும் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சலீம், தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆர். கே. சுரேஷே இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இவருடன் முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடித்து வருகிறார்.

சரவணஷக்தி இயக்க, கதை, திரைக்கதை வசனம் எழுதுகிறார் எம்.எம்.எஸ். மூர்த்தி. இளையவன் என்பவர் இசையமைக்கிறார்.

Billa pandy clash with Thaana serndha kootam on Pongal 2018

billa pandy

என் முன்னேற்றத்திற்கு முஸ்லீம் நண்பர்கள் முக்கிய காரணம்.. ரஜினி பேச்சு

என் முன்னேற்றத்திற்கு முஸ்லீம் நண்பர்கள் முக்கிய காரணம்.. ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 audio new posterசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா துபாய் நாட்டில் நடைபெற்றது.
அவ்விழாவில் கலந்துக் கொண்ட ரஜினி இஸ்லாமியர்கள் பற்றி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது…

என் வாழ்வில் நான் இந்த அளவுக்கு வந்ததற்க்கு மிகப்பெரிய காரணம் என் இஸ்லாமிய நண்பர்கள் தான்.

நான் கண்டக்டராக இருக்கும் போது எனக்கு பல உதவிகளை செய்தவர்கள் என் இஸ்லாமிய நண்பர்கள் தான்.

நான் இப்போது இருக்கும் போயஸ் கார்டன் வீட்டை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர்தான்.

ராகவேந்திரா மண்டபத்தின் இடத்தை எனக்கு விற்றவரும் ஒரு இஸ்லாமியர்தான்..

அனைத்துக்கும் மேல என் குரு ராகவேந்திரா சுவாமி கோயில் அமைய மந்த்ராலயாவில் இடம் கொடுத்தவரும் ஒரு நவாப் தான்.

அதுக்கும் மேல நான் நடித்த படங்களிலேயே ஒரு படத்தின் பெயரை சொன்னால் அதிரும் என்றால் அது பாட்ஷா படம் தான்.

அதுவும் ஒரு இஸ்லாமியர் பெயர் தான்.

இப்படி பல வகையில் இஸ்லாம் என் வாழ்க்கையில் உள்ளது என்று 2.O ஆடியோ விழா மேடையில் ரஜினிகாந்த் பேசினார்.

Islam plays main role in my life says Rajini in 2point0 audio launch at Dubai

rajini muslim kaala

ரஜினியாக வாழ்வது அப்படியென்ன கஷ்டம்.? ரஜினியிடம் ஆர்.ஜே.பாலாஜி கேள்வி

ரஜினியாக வாழ்வது அப்படியென்ன கஷ்டம்.? ரஜினியிடம் ஆர்.ஜே.பாலாஜி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 music event hostதுபாய் நாட்டில் 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவில் லைக்கா தயாரிப்பளர் சுபாஷ்கரன், ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன், ஏஆர்.ரஹ்மான், ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவின் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை மூவர் தொகுத்து வழங்கினர்.

தமிழுக்கு ஆர்.ஜே.பாலாஜியும், தெலுங்குக்கு ராணா டக்குபதியும் மற்றும் இந்திக்கு கரண் ஜோஹர் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

அப்போது ஆர்.ஜே.பாலாஜி, ரஜினியை பார்த்து, நான் ஒரு கட்டுரையில் ரஜினியாக வாழ்வது கஷ்டம். அவருக்கு மட்டுமே ரஜினியாக வாழ்வது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும் என்கிறார்கள்? அது ஏன்? என்றார்.

அதற்கு பதிலளித்து ரஜினி கூறியதாவது…

ஒருவேளை ஆண்டவன் மேல நம்பிக்கை இல்லையின்னா ரஜினிகாந்தா வாழ்றது கஷ்டமா இருந்திருக்கலாம்.

நம்பிக்கை இருந்தனால வாழ்றது சுலபமாகிடுச்சி.” என்றார்.

Why its difficult to live as Rajini RJ Balaji question to Rajini

rajini with his grand sons

துபாய் நாட்டை அதிர வைத்த 2.0 இசை வெளியீட்டு விழா

துபாய் நாட்டை அதிர வைத்த 2.0 இசை வெளியீட்டு விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 movie music launched at Dubaiரஜினிகாந்த் நடிப்பில் தயாரான 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரம்மாண்டமான முறையில் நடை பெற்றது.

இந்த விழாவில் ரஜினிகாந்த், ஏ.ஆா்.ரகுமான், சங்கர், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த இசை வெளியீட்டு விழா துபாயில் நள்ளிரவில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற்றது.

12 ஆயிரம் பேர் இந்நிகழ்ச்சியைப் பார்க்க இலவச அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

துபாயில் உள்ள பெரிய மால்களில் ரூபாய் 2 கோடி செலவில் பிரம்மாண்ட எல்.இ.டி. திரை அமைக்கப்பட்டு இந்நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

நிகழ்ச்சியில் ஏஆர்.ரகுமானும், ஷங்கரும் ரயில் வடிவிலான வாகனத்திலேயே மேடைக்கு வந்தனா்.

ரஜினிகாந்த் அரங்கத்திற்குள் வரும்போது முத்து படத்தில் இடம் பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி பாடலின் தீம் சாங் ஒலிக்கப்பட்டது.

ரஜினி மேடைக்கு ஏறியபோது கரவொலி அடங்க வெகு நேரமானது.

லதா ரஜினி, சௌந்தர்யா ரஜினி மற்றும் தனுஷ் உடன் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் குடும்பத்துடன் இந்த விழாவில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 125 சிம்பொனி கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சியை நேரலையாக நடத்தினார்.

மேலும் 2.0 படத்திலிருந்து ஒரு பாடலை இந்நிகழ்ச்சியில் நேரலையாக இசையமைத்தார்.

இதனைத் தொடா்ந்து 2.0 படத்தில உள்ள இரண்டு பாடல்கள் முதல்கட்டமாக வெளியிடப்பட்டது.

பாடல் வெளியான சில மணித்துளிகளிலேயே பாடல்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கின.

தற்போது வரை அக். 28ல் வரை ட்ரெண்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

rajini welcome

More Articles
Follows