தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஷால் வெங்கட் இயக்கத்தில் அசோக் செல்வன், மணிகண்டன், அபி, நாசர், கேஎஸ்.ரவிக்குமார், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛‛சில நேரங்களில் சில மனிதர்கள்”.
இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் கலந்துக் கொண்டார்.
அந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது…
எங்களை பார்த்து புதியவர்கள் வியக்க வேண்டாம். நாங்கள் செய்த தவறை நீங்கள் செய்யாமல் இருந்தால் போதும்.
சினிமாவுக்கு சாதி, மதம் கிடையாது. தியேட்டரில் விளக்கை அணைத்து விட்டால் அங்கு சாதி, மதம் இல்லை.
சினிமாவல் ஆர்வம், திறமை இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.
இங்கு குப்பத்திலும், மழைநீரிலும் நான் நடந்து சென்றேன். அப்போது வராத கொரோனா நான் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் போய்விட்டு வந்த பின் வந்து விட்டது.
எனவே யாரும் அஜாக்கிரதையாக இருக்காதீர். முககவசம் நம் உயிரை காக்கும் கவசமாக மாறியுள்ளது. எனவே மறவாமல் அணிந்துக் கொள்ளுங்கள்”
இவ்வாறு கமல் பேசினார்.
Kamal Haasan speech at Sila Nerangalil Sila Manidhargal trailer launch