நாளை கடிகாரத்துக்குள்ளும் வருவேன்..; ஆட்டத்தை ஆரம்பித்த கமல்ஹாசன்

நாளை கடிகாரத்துக்குள்ளும் வருவேன்..; ஆட்டத்தை ஆரம்பித்த கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னத்திரையில் 5 சீசன்களாக ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி இனி ‘பிக்பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் டிஸ்னிபிளஸ் ஹார்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சியை ஜனவரி 30ஆம் தேதி முதல் 24 மணி நேரமும் பார்க்கலாம் என்ற செய்தியை சில தினங்களுக்கு முன் நம் FILMISTREET தளத்தில் பார்த்தோம்.

இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வங்குகிறார்.

இந்த நிகழ்ச்சியில் ஏற்கெனவே போட்டியாளர்களாக இருந்தவர்களில் சிலர் கலந்துக் கொண்டுள்ளனர்.

பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, சுஜா வருனி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி, அபினய், நிரூப், வனிதா விஜயகுமார், சினேகன் மற்றும் அபிராமி உள்ளிட்ட 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியின் அறிமுக நிகழ்ச்சி நேற்று ஒளிப்பரப்பானது.

இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசும்போது…

“முதலில் பெரிய திரையில் (சினிமா) இருந்து சின்னத்திரைக்கு (டிவி) வந்தேன், இப்போது சின்னத்திரையில் இருந்து கைபேசி திரைக்கு (செல்போன் ஸ்கிரீன்) வந்திருக்கிறேன்.

நாளை கடிகாரத்துக்குள் வந்தாலும் அதற்கும் வருவேன்.

பிக்பாஸை தினமும் ஒரு மணி நேரம்தான் விஜய் டிவியில் பார்க்க முடிந்தது.

இனி நிகழ்ச்சியை 24 மணி நேரமும் பார்க்கலாம். ஒரு மணி நேரம் போதும் என்று நினைக்கிறவர்கள், தினமும் இரவு 9 மணிக்கு தொகுப்பை பார்க்கலாம்.

ஏற்கெனே பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுபவசாலிகள்தான் இப்போது வந்துள்ளனர். சிலர் விட்ட இடத்தை பிடிக்க வந்திருக்கலாம் அல்லது தீர்க்க வேண்டிய கணக்கை தீர்க்க வந்திருக்கலாம்.

எப்படி இருந்தாலும் அவர்களின் விளையாட்டு உங்களை சுவாரஸ்யப்படுத்தும். நீங்கள் நிகழ்ச்சியை கவனியுங்கள். நீங்கள் சரியாக கவனிக்கிறீர்களா? என்று நான் உங்களை கவனிக்கிறேன். ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா?. என பேசினார் கமல்ஹாசன்.

நீங்க எதுல வந்தாலும் நாங்க பார்ப்போம்.. வாங்க உலகநாயகனே…

Kamal Haasan launched the 24×7 live streaming show Bigg Boss Ultimate

சூர்யா-சுதா கொங்கரா மீண்டும் கூட்டணி.. ஹீரோ மட்டும் வேற..!

சூர்யா-சுதா கொங்கரா மீண்டும் கூட்டணி.. ஹீரோ மட்டும் வேற..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மாதவன் தயாரித்து நடித்த ‘இறுதிச்சுற்று’ படத்திற்கு பிறகு அனைவராலும் கவரப்பட்ட இயக்குனராக மாறினார் சுதா கொங்கரா.

இதனையடுத்து சுதா கொங்கரா இயக்கிய சூர்யாவின் ‘சூரரை போற்று’ படமும் வெளியாகி பெரியளவில் வெற்றிப் பெற்றது.

சூர்யா தயாரித்து இருந்த இந்த படம் 2020ல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

தற்போது ஹிந்தியில் இந்த படத்தை ரீமேக் செய்யவிருக்கிறாராம் சூர்யா.

இந்த படத்தை சுதா கொங்கராவே இயக்கவுள்ளார்.

ஆனால் சூர்யா வேடத்தில் 2.0 பட வில்லன் பாலிவுட் ஹீரோ அக்சய்குமார் நடிக்கிறார் என தகவல்கள் வந்துள்ளன.

எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Suriya and Sudha Kongara joins new film

கார்த்தி படத்தை இயக்கும் பேச்சுலர் டைரக்டர்.? ஹீரோயின் இவரா.?

கார்த்தி படத்தை இயக்கும் பேச்சுலர் டைரக்டர்.? ஹீரோயின் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் கார்த்தி கைவசம் தற்போது பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட படங்கள் உள்ளன.

சர்தார் படத்தில் 2 வேடங்களில் நடித்துள்ளார். அதில் கார்த்தியின் வயதான வேடம் பெரியளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.

லோகேஷ் இயக்கத்தில் உருவாகும் என கூறப்பட்ட கார்த்தியின் ‘கைதி 2’ படம் குறித்து செய்திகள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் கார்த்தியின் அடுத்த பட தகவல்கள் வந்துள்ளன.

ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சுலர் படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கிறாராம் கார்த்தி.

இதில் கார்த்திக்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்த தொடங்கியுள்ளதாம்.

கார்த்தி மற்றும் சமந்தா இருவரும் முன்னணி நட்சத்திரங்களாக இருந்தும் இதுவரை இணைந்து நடிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Karthi next with Bachelor director sathish selvakumar

விஜய்சேதுபதி சிவகார்த்திகேயன் படங்களின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட்

விஜய்சேதுபதி சிவகார்த்திகேயன் படங்களின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதால் (சத்தியமா அப்படின்னு நாங்க சொல்லல) இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழக சினிமா தியேட்டர்களிலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் புதிய ஊரடங்கு தளர்வால் தமிழ் திரையுலகினர் உற்சாகமடைந்து தங்கள் படங்களின் வெளியீட்டை அறிவித்து வருகின்றனர்.

அடுத்த வாரம் பிப்ரவர் 11ல் விஜய்சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய மணிகண்டனின் அடுத்த படம் தான் இது.

விவசாயம் மற்றும் விவசாயிகளின் உணர்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

இவருடன் விஜய் சேதுபதி, யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இத்துடன் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள ‘டான்’ படத்தின் வெளியீட்டு அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

நாம் ஏற்கெனவே (ஜனவரி 28 அன்று) மார்ச் மாத இறுதியில் டான் படம் வெளியாகும் என செய்தி வெளியிட்டு இருந்தோம்.

தற்போது மார்ச் 25ல் டான் ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளனர்.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘டான்’.

இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஷிவாங்கி, முனீஸ்காந்த், காளி வெங்கட், ஆர்.ஜே.விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கிய கேரக்டரில் கௌதம் மேனன் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் இந்த படத்திற்காக பணிபுரிந்துள்ளனர்.

Sivakarthikeyan and Vijay Sethupathi film release details

பிப்ரவரி 4ல் விஷால் படத்துடன் மோதும் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’

பிப்ரவரி 4ல் விஷால் படத்துடன் மோதும் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் (சத்தியமா அப்படின்னு நாங்க சொல்லல) இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தை போலவே கர்நாடகாவிலும் டெல்லியிலும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக சினிமா தியேட்டர்களிலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் புதிய ஊரடங்கு தளர்வால் தமிழ் திரையுலகினர் உற்சாகமடைந்து தங்கள் படங்களின் வெளியீட்டை அறிவித்து வருகின்றனர்.

இந்த வாரம் பிப்ரவரி 4ல் விஷால் நடித்துள்ள ‘வீரமே வாகை சூடும்’ ரிலீஸ் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

துபா. சரவணன் இயக்கியுள்ள இதில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, மறைந்த ஆர்.என்.ஆர்.மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் இசையமைக்க கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி படம் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’. இப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய சுரேன் விகாஷ் இசையமைத்துள்ளார்.

ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரிக்க ஸ்டூடீயோ கிரீன் நிறுவனம் வெளிய்யிடுகிறது. எடிட்டிங் பணிகளை ராம்-சதீஷ் செய்துள்ளனர்.

இந்த படத்தை வரும் பிப்ரவரி 4ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்கின்றனர்.

Pandrikku Nandri Solli movie to clash with Vishal film

விஜய்-சூர்யாவை அடுத்து அஜித்துடன் இணையும் சூப்பர் ஸ்டார்

விஜய்-சூர்யாவை அடுத்து அஜித்துடன் இணையும் சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் மட்டும்தான் ஒரு பிரபல ஹீரோ படத்தில் மற்றொரு பிரபல ஹீரோ நடிக்க தயங்குவார்.

ஆனால் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் அந்தந்த மாநில ஸ்டார்கள் இணைந்து ஒரே படத்தில் நடிப்பார்கள்.

இதனால் பிரபலமான நாயகனின் தமிழ் படத்தில் நடிக்க கேட்டால் அவர்கள் உடனே ஓகேவும் சொல்லிவிடுவார்கள்.

விஜய் நடித்த ஜில்லா படத்திலும் சூர்யா நடித்த காப்பான் படத்திலும் மோகன்லால் நடித்திருந்தார்.

சில வருடங்களுக்கு முன் வெளியான கமலின் உன்னை போல் ஒருவன் படத்திலும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது வினோத் இயக்கவுள்ள அஜித் 61 படத்தில் நடிக்க மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

விரைவில் இதுபற்றிய அறிவிப்பு தயாரிப்பாளர் போனிகபூர் தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Super Star joins with Ajith Kumar for his new film?

More Articles
Follows