கமல் கட்சி சின்னத்தில் சிக்கல்; விட்டுக் கொடுத்தது தமிழர் பாசறை

கமல் கட்சி சின்னத்தில் சிக்கல்; விட்டுக் கொடுத்தது தமிழர் பாசறை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

maiamகடந்த பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற தன் கட்சி பெயரை அறிவித்து கட்சி சின்னம் மற்றும் கொடியை அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன்.

கட்சி சின்னத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்த 6 கைகளுக்கு மத்தியில் நட்சத்திரம் இருப்பது போன்ற உருவம் இடம்பெற்று இருந்தது.

எனவே இதனை விமர்சித்து பலரும் தங்கள் கருத்துக்கள் பதிவிட்டனர்.

அதே போன்ற பல சின்னங்கள் முன்பே வந்துள்ளன என ஆதாரங்ளுடன் மீம்ஸ்களை உருவாக்கி வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில் இதுகுறித்து கமல் தன் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது:

மும்பையில் இருந்து தமிழர் பாசறையை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.

எங்களது கட்சி சின்னத்தில் தங்கள் அமைப்பு சின்னத்தின் சாயல் இருப்பதாக தெரிவித்தனர்.

தற்போது அவர்கள் என் மீதான அன்பின் காரணமாக அந்த சின்னத்தின் உரிமையை எங்களுக்கு தந்து விட்டனர்.

விமர்சனங்கள், பிரச்சினைகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களே இந்த பிரச்சினையை தீர்த்துவைத்து உள்ளனர்.

எனவே, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னத்தையும், பெயரையும் மாற்றியமைக்கும் திட்டம் எதுவும் இல்லை” என தெரிவித்தார் கமல்ஹாசன்.

ஒருவேளை அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை என்றால் என்ன செய்திருப்பார் கமல்? எனவும் தங்கள் கேள்விகளை வைக்கின்றனர் சிலர்.

ஸ்ரீதேவி மரணம் எழுப்பும் கேள்விகள்; விடை சொல்வார் யாரோ..?

ஸ்ரீதேவி மரணம் எழுப்பும் கேள்விகள்; விடை சொல்வார் யாரோ..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

srideviஇந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு காரணமாக கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இறந்தார் என அறிவிக்கப்பட்டது.

இந்த தகவலை முதலில் ஊடகங்களுக்கு யார் தெரிவித்தது என்பது இதுவரை தெரியவில்லை.

அதன்பின்னர் மது போதை காரணமாக குளிக்கும் நீர் தொட்டியில் விழுந்து மூச்சு திணறி இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த தகவலை பிரதேச பரிசோதனை செய்த பின்னர் வெளியிட்டனர்.

ஆனால் தொட்டியின் அளவு நிச்சயம் பெரிதாக இருக்க வாய்ப்பில்லை. அப்படி என்றால் அவர் அதில் இருந்து வெளியே வந்திருக்கலாமே எனவும் அவரது ரசிகர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

கணவர் போனிகபூர் ஸ்ரீதேவியின் குளியல் அறைக்கு சென்ற நேரம் மாலை 6.30 மணி என்கிறார்கள். ஆனால் போலீசுக்கு தகவல் சொன்ன நேரம் இரவு 9 மணி என்கிறார்கள்.

அப்படி என்றால் அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஒரு வேளை ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் இருந்தாலும் அதுவரை அந்த ஸ்டார் ஓட்டலின் மருத்துவரை போனி கபூர் ஏன் நாடவில்லை? என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை சொல்லுவார் யாரோ..?

ரஜினிக்கும் கமலுக்கும் இதில் கூட இத்தனை ஒற்றுமையா..?

ரஜினிக்கும் கமலுக்கும் இதில் கூட இத்தனை ஒற்றுமையா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and kamalதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இரு துருவங்களாக கமல், ரஜினி இருவரும் திகழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கு அடுத்து சினிமாவில் 2 தலைமுறைகள் வந்துவிட்ட போதிலும் இன்றுவரை இவர்களின் மார்கெட்டுக்கு மவுசு குறையவில்லை.

சினிமாவைத் தாண்டி இருவருக்கும் நல்ல நட்பு புரிதல் உள்ளது.

எந்த சக்தியாலும் இவர்களை பிரிக்க முடியாது என்னுமளவுக்கு இவர்களிடையே பல ஒற்றுமைகளை கூறலாம்.

தற்போது இருவரும் தமிழக மக்களின் நலனை பேணிக் காக்க அரசியல் களத்தில் குதித்துள்ளனர்.

கமல் தன் கட்சியை அறிவித்து விட்டார். ரஜினி விரைவில் அறிவிக்கவுள்ளார்.

இந்த ஒற்றுமைகளை தாண்டி இருவரிடையே தற்போது மற்றொரு ஒற்றுமையும் ஏற்பட்டுள்ளது.

ரஜினி நடிப்பில் காலா மற்றும் 2.ஓ படங்கள் திரைக்கு வரவுள்ளன.

அதுபோல் கமல் நடிப்பில் விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

இவர்கள் இருவரும் தங்கள் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்தபின் இருவரும் ஒவ்வொரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்2 படத்தில் கமல் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படத்தை பிரபல நிறுவனமான லைகா தயாரிக்கிறது.

அதுபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இப்படத்தை பிரபல நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இசையமைப்பாளர், டெக்னீஷியன்கள் மற்றும் நாயகி பெயர்களை இதுவரை இவர்கள் இருவரும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணைந்த 3வது காமெடியன்

விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் இணைந்த 3வது காமெடியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajithஅஜித் – சிவா 4-வது முறையாக இணையும் படம் ‘விஸ்வாசம்’.

சத்யஜோதி தயாரிக்கவுள்ள இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்க, இமான் இசையமைக்கவுள்ளார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

வடசென்னை பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா நடிக்கவிருப்பதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

தற்போது 3வது காமெடியனாக ரோபோ சங்கரும் இணைந்திருக்கிறாராம்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

மார்ச் 5ல் பர்ஸ்ட் (லுக்) புள்ளியை வைக்கும் கோலமாவு கோகிலா

மார்ச் 5ல் பர்ஸ்ட் (லுக்) புள்ளியை வைக்கும் கோலமாவு கோகிலா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayantharaநயன்தாரா நடிப்பில் `இமைக்கா நொடிகள்’, `கொலையுதிர் காலம்’, `கோலமாவு கோகிலா’ ஆகிய மூன்று படங்களும் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இதில் ‘கோலமாவு கோகிலா’ படத்தை நெல்சன் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் மார்ச் 5ம் தேதி வெளியிட இப்பட தயாரிப்பு நிறுவனம் லைகா முடிவு செய்துள்ளது.

அதனையடுத்து மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தில் ஒரு பாடலை வெளியிடவுள்ளனர்.

ஸ்ரீதேவி மரணத்தால் கதறியழும் மகள் ஜான்வி; ஆறுதல் சொன்ன ரஜினி-கமல்

ஸ்ரீதேவி மரணத்தால் கதறியழும் மகள் ஜான்வி; ஆறுதல் சொன்ன ரஜினி-கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sridevi and jhanviகடந்த பிப்ரவரி 24ஆம் தேதி இரவு துபாய் நாட்டில் மரணம் அடைந்தார் நடிகை ஸ்ரீதேவி.

மரணம் அடைந்து 3 நாட்கள் ஆகியும் ஸ்ரீதேவியின் உடல் மும்பை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் துக்கம் தாங்க முடியாமல் விம்மி விம்மி அழுது கொண்டே இருக்கிறாராம் இவரது மகள் ஜான்வி.

கடந்த 3 நாட்களாக மும்பை அந்தேரியில் உள்ள ஸ்ரீதேவி வீட்டில் ஏராளமான ரசிகர்கள் சோகத்துடன் கூடியுள்ளனர்.

போனிகபூரின் தம்பியும், நடிகருமான அனில் கபூர் வீட்டில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தங்கியுள்ளார்.

இதனால் நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்கள் பலரும் அங்கு சென்று ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் மும்பை சென்று ஓட்டலில் தங்கி உள்ளனர்.

அவர்கள் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்து ஆறுதல் கூறியுள்னர்.

மேலும் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், கமலின் முன்னாள் மனைவி சரிகா, மகள்கள் சுருதிஹாசன், அக்சரா ஆகியோரும் ஜான்விக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

More Articles
Follows