தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் வகையில் மத்திய அரசின் வேளாண் மசோதாக்கள் உள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
அவரின் அறிக்கையில்..
ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், எட்டு வழிச் சாலை திட்டம் என ஏற்கனவே பல திட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகள் வயிற்றில் அடித்துள்ளது அரசு.
தற்போது விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் புதிய சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளது.
இதன் மூலம் விவசாயிகளுக்கு மேலும் ஒரு துரோகத்தை செய்துள்ளதாக கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
விவசாயிகள் நலனை பாதுகாக்கும் சட்ட திருத்தங்களுடன், வேளாண் மசோதா சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
Kamal Haasan, attacks ruling AIADMK