தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்தது கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம்.
மே 2 தேர்தல் முடிவுக்கு பின்னர் அந்தக் கட்சியிலிருந்து பலரும் விலக தொடங்கினர்.
கமீலா நாசர், துணைத் தலைவர் மகேந்திரன், பொதுச் செயலாளர் சி.கே.குமரவேல், ஐஏஎஸ் சந்தோஷ் பாபு, பத்மப்ரியா, முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகினர்.
இவர்களில் பலர் கட்சி தலைவர் கமல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில்… “தன் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும் என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும்…
“மாற்றம் என்றும் மாறாது நிகழ்ந்துக் கொண்டே இருக்கும். அரசியல் மாற்றம் நாட்டில் ஏற்பட, நாம் ஏற்றிய கொடி பறந்துகொண்டு இருக்கிறது.
நேர்மை வழியில் மாற்றத்தை தேடுபவர்களாய் நாம் உள்ளவரையில் நம் கொடி புத்தொளியோடு பறந்துகொண்டே இருக்கும். மூச்சுள்ளவரை அதன் பாதுகாவலனாய் நான் இருப்பேன்.
தோல்வியை ஆராய்ந்து அதில் வெற்றிப் பாடம் கற்பது நாம் கண்ட சரித்திரம். முக அறிமுகம் இல்லாதவர்களை மக்களிடம் மின்ன வைக்க நான் நினைத்ததுதான் சிலருக்கு சர்வாதிகாரமாய் தெரிகிறது. பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துபவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
அவர்களுக்கு காலம் பதில் சொல்லும். கூட்டணி வைத்துக் கொள்வதில் நாம் காட்டிய வெளிப்படைத்தன்மை அனைவரும் அறிந்ததே. தோல்வியை கொட்ட குழி தேடுவது ஜனநாயகம் அல்ல.
நாடோடிகள் ஓரிடம் தங்க மாட்டார்கள். வணிகர்கள் வியாபாரம் முடியும் வரை மட்டுமே தங்குவார்கள். கட்சியிலிருந்து சென்றவர்கள் மீண்டும் திரும்பி வந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
தன் தவறுகளை மறைக்க பிறர் மீது குற்றஞ்சாட்டுபவர்களுக்கு காலம் பதில் சொல்லும்.
தொண்டர்கள் நம் தரம் குறையாமல் வாதாடலாம்.
உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை அனைவரும் விரைவில் காண்பார்கள்”
என தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.
Kamal Haasan about his loss in politics
“என் உயிருள்ளவரை அரசியலில் இருப்பேன்; அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் இருக்கும்” pic.twitter.com/RwAa9ykS71
— Kamal Haasan (@ikamalhaasan) May 24, 2021