Breaking: மகாகவி பாரதியார் உருவத்தில் உலகநாயகன் அவதாரம்

Breaking: மகாகவி பாரதியார் உருவத்தில் உலகநாயகன் அவதாரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal bharathiyarஉலகநாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் விரைவில் அரசியல் நாயகனாக வலம் வரவிருக்கிறார்.

அவர் ஆரம்பித்துள்ள மையம் விசில் என்ற செயலிலை அடுத்த ஆண்டு முழுமைப்படுத்தி, கட்சி பெயரையும் அறிவித்து அரசியல் களம் காணவிருக்கிறார்.

இதனிடையில் அவர் கூறிவரும் அரசியல் கருத்துக்கள் தமிழக அமைச்சர்களிடையே பல்வேறு எதிர்ப்புகளை உருவாக்கி வருகிறது.

கமலை கைது செய்ய தயங்கமாட்டோம் என அமைச்சர்கள் அவருக்கு எச்சரிக்கை கொடுத்து வரும் நிலையில் கமலுக்கு ஆதரவாக பேசியிருந்தார் சாருஹாசன்.

இந்நிலையில் சில நொடிகளுக்கு முன்னர் ட்விட்டரில் தன் புகைப்படத்தை மாற்றியுள்ளார் கமல்ஹாசன்.

அதில் மகாகவி பாரதியாரைப் போல தலையில் முண்டாசு கட்டி ஆவேசமாக பார்ப்பது போல் வரைந்திருக்கிறார்.

இப்படம் நிச்சயம் பரபரப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்.

Kamal chaged his twitter profile pic as Bharathiyar with Kamal face

ஜெயா வழி லஞ்ச வழிதானே; கமலை எதிர்த்த அமைச்சரை சாடும் சாருஹாசன்

ஜெயா வழி லஞ்ச வழிதானே; கமலை எதிர்த்த அமைச்சரை சாடும் சாருஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Charuhasan supports his brother Kamalhassan in TN Minister warning issueஓரிரு தினங்களுக்கு முன் தமிழக அரசை விமர்சித்து.. “ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். அதை கண்டுபிடித்தபின் நிரூபிக்காமல் போவதும் குற்றம்தான். குற்றவாளிகள் நாடாளக்கூடாது” என்று கமல்ஹாசன் தன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து கமலுக்கு தமிழக அமைச்சர்கள் சார்பில் எதிர்ப்பு குரல் கிளம்பியது.

“அரசு மீது அபாண்டமான குற்றங்களை சுமத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது. எந்தவித ஆதாரம் இல்லாமல் அரசின் மீது குற்றங்களை சுமத்தி வரும் கமல் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது.” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

எனவே இதனையடுத்து அமைச்சர் ஜெயக்குமாருக்கு பதிலளிக்கும் விதமாக கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அமைச்சர் ஜெயக்குமார், ‘ஜெயலலிதா வழி’ என்று சொன்னால் லஞ்ச வழி என்றுதான் தெரிகிறது, நான் சொல்கிறேன் ’ஜெயலலிதா வழி’ என்பது 60 கோடிக்கு குறையாமல் கொள்ளை அடித்தது. உங்கள் அரசின் நடவடிக்கையை நான் எதிர்க்கத் தயார்.

வழக்கைப் போடுங்கள். தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் நான் வாழ்பவன், உங்கள் வழக்கை கணினி மூலம் தொடங்கலாம். நீங்கள் ஜெயலலிதா வழியை விடும் வரை நான் விடப்போவதில்லை.

எனக்கும் உச்ச நீதிமன்றத்துக்கும் தெரிந்த ஜெயலலிதா வழி 60 கோடி கொள்ளை?
இவ்வாறு சாருஹாசன் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “கமல் சொல்வது புரியவில்லை என்று சொல்பவர்கள் பொய்யர்கள். பிடிக்கவில்லை என்று சொல்வதற்குப் பதிலாக புரியவில்லை என்கிறார்கள். ஜெயலலிதாவை உயர் நீதிமன்றம் குற்றவாளி என்றது புரியவில்லையா?அல்லது பிடிக்கவில்லையா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் சாருஹாசன்.

Charuhasan supports his brother Kamalhassan in TN Minister warning issue

யுவன் தயாரிப்பில் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-சீனுராமசாமி

யுவன் தயாரிப்பில் மீண்டும் இணையும் விஜய்சேதுபதி-சீனுராமசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

yuvan stillsதேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தால் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்தவர்கள் இயக்குனர் சீனுராமசாமி மற்றும் நடிகர் விஜய்சேதுபதி.

இதனையடுத்து இந்த கூட்டணி அடிக்கடி இணைய ஆரம்பித்து நல்ல தரமான படங்கள் கொடுத்து வருகின்றனர்.

தர்மதுரை மற்றும் இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் இணைந்தனர்.

இதில் இடம் பொருள் ஏவல் படம் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் மாமனிதன் என்ற புதிய படத்திற்காக இணைகின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பது மட்டுமல்லாது படத்தை தயாரிக்கவும் செய்கிறார் யுவன் சங்கர் ராஜா.

இதன் சூட்டிங்கை 2018 ஜனவரியில் தொடங்கவிருக்கிறார்களாம்.

Seenu Ramasamy and Vijay Sethupathi teams up for Maamanithan Produced by Yuvan

மந்த்ராலயத்தில் ரஜினி தரிசனம்; விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பு.?

மந்த்ராலயத்தில் ரஜினி தரிசனம்; விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini visited Mantralayam today So he may announce his political entry soonசில மாதங்களுக்கு முன், ரசிகர்களை சந்திக்கும்போது போர் வரும்போது சந்திப்போம் என தன் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக தெரிவித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து அவரது அரசியல் பிரவேசம் எப்போது? என மீடியாக்கள் ஆராய்ந்து அலச தொடங்கின.

இதனிடையில் வருகிற டிசம்பர் 12ஆம் தன் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என கணிப்புகள் வரத் தொடங்கின.

இந்நிலையில் இன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள மந்த்ராலயத்தில் தனது ஆஸ்தான தெய்வமான ராகவேந்திரரை தரிசிக்க சென்றுள்ளார் ரஜினிகாந்த்.

அவரது இந்த பயணம் ஆன்மிகம் மட்டுமல்லாமல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

காரணம் தனது இஷ்ட தெய்வமான ராகவேந்திரரிடம் ஆசி வாங்கவே அவர் அங்கு சென்றதாகவும், விரைவில் அரசியல் அறிவிப்பு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Rajini visited Mantralayam today So he may announce his political entry soon

rajini mantralaya

ஆர்யாவ கட்டிக்க ஆசைப்படும் பெண்ணா நீங்கள்.? இந்த நம்பர்ல பேசுங்க

ஆர்யாவ கட்டிக்க ஆசைப்படும் பெண்ணா நீங்கள்.? இந்த நம்பர்ல பேசுங்க

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya pairநடிகர் ஆர்யாவுக்கு சினிமாவுலகில் ஜிம்பாய் மற்றும் ப்ளேபாய் என்ற செல்லப் பெயர்கள் உண்டு.

ஆனால் இவர் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் பேச்சுலராக வாழ்ந்து வருகிறார்.

அண்மையில் ஒரு வீடியோவில் லவ் எதுவும் செட் ஆகல. நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன். என தன் நண்பருடன் ஜிம்மில் பேசியிருந்தார்.

அந்த வீடியோ லீக்காகி இணையத்தில் வைரலானது.

தற்போது அதற்கு விளக்கம் அளித்து மற்றொரு வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது…

ஜிம்மில் பேசிய அந்த வீடியோ லீக்கானது. ஆனாலும் அதில் நான் பேசியது அனைத்தும் உண்மைதான்.

என் திருமணத்திற்கு பெண் தேடுகிறேன். எந்த நிபந்தனையும் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் 73301-73301 என்ற எண்ணுக்கு போன் செய்யலாம் என்று கூறி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

நாங்க போன் பண்ணி பார்த்தவரை கிடைத்த தகவல் இதோ கீழே…

அந்த நம்பருக்கு போன் செய்தபோது ஆர்யாவின் குரல் கேட்டது. ஆனால் அவர் பேசல. அவரின் ரெக்கார்டு வாய்ஸ் அது.

என்னை தொடர்பு கொண்டதற்கு நன்றி. உங்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வந்திருக்கும்.

அதில் உள்ள இணைப்பை க்ளிக் செய்து உங்களின் விபரங்களை பூர்த்தி செய்து அனுப்புங்கள். நாம் விரைவில் மீட் செய்வோம் என்று ஆர்யாவின் குரல் ஒலித்தது.

எஸ்.எம்.எஸ்.ஸில் வந்த லிங்கை க்ளிக் செய்தால் அதில் நம் பெயர், வயது, முகவரி, பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் முடியும் தேதி, தாய் மொழி உள்ளிட்ட தகவல்களை கேட்கிறார்கள்.

இவையில்லாமல் உங்களை பற்றிய அறிய 1 நிமிட வீடியோவையும் அப்லோடு செய்ய கேட்கிறார்கள்.

எவ்வளவோ பண்ணிட்டோம். ஆர்யாவுக்காக இதை செய்ய மாட்டோமா? என்கிறீர்களா? அப்போ போன போடுங்க. என்ஜாய்.

If you wish to marry Actor Arya then call this number

தென்னிந்தியாவில் முதன்முறையாக யுனிசெப்பின் நல்லெண்ண தூதரானார் த்ரிஷா

தென்னிந்தியாவில் முதன்முறையாக யுனிசெப்பின் நல்லெண்ண தூதரானார் த்ரிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Trisha at UNICEF press meet (8)யுனிசெஃப் அமைப்பு இந்தாண்டிற்கான உலக குழந்தைகள் தின (நவ.20) தலைப்பாக “குழந்தைகள் கையகப்படுத்துதல்” (Children Take Over) என்பதை தேர்வு செய்தது.

அதை பிரபலப்படுத்தும் விதத்திலும், அந்த அமைப்பின் நல்லெண்ண தூதராக த்ரிஷாவை நியமிக்கவும் யுனிசெஃப் அமைப்பு சென்னையில் குழந்தைகளுடன் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியை யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜோப் சகாரியா, யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக பொறுப்பேற்ற நடிகை த்ரிஷா, தமிழ்நாடு குழந்தை உரிமை அமைப்பின் தலைவர் நிர்மலா மற்றும் யுனிசெஃப் அதிகாரி சுகதா ராய் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினர்.

யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜோப் சகாரியா அளித்த பேட்டியில், “இப்போதுள்ள குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதை விட, அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன.

அதனால்தான், இந்தாண்டு தலைப்பை “குழந்தைகள் கையகப்படுத்துதல்” என்று வைத்துள்ளோம். இன்று (நவ.20) டெல்லியில் உள்ள யுனிசெஃப் மையத்தை குழந்தைகள் நடத்தப் போகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், நடிகை த்ரிஷாவை யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதுவராக அறிவிக்கவுள்ளோம். தென் இந்தியாவில் இதுவரை யுனிசெஃப் யாரையும் நியமித்தது கிடையாது. இதுவே முதல் முறை.” என்று அவர் கூறினார்.

குழந்தைகளின் கைதட்டலுக்கு இடையில் நடிகை த்ரிஷா பேசியதாவது…

“உரிமை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டியது. நாம் அனைவரும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அனைத்து கொடுமைகளுக்கும் குரல் கொடுக்கவேண்டும்.

நான் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த விரும்புகிறேன். திறந்த இடத்தில் மலம் கழித்தல், ஊட்டச்சத்து குறைபாடு இவை அனைத்தும் இல்லாத நாட்டை நாம் உருவாக்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு படிப்பு மிக அவசியம், அவர்கள் படிப்பதனால் நாடு முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும்” என்று பேசினார்.

பின் த்ரிஷா குழந்தைகளிடம் உரையாடினார். யுனிசெஃப் அமைப்பின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கான தலைவர் ஜோப் சகாரியா, த்ரிஷாவிற்கு நினைவுப் பரிசு அளித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் குழந்தைகளுடன் த்ரிஷா புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Trisha to be UNICEF celebrity advocate for child rights

trisha unicef dance

More Articles
Follows