கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து போலீஸிடம் மன்னிப்பு கேட்ட கமல்

கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து போலீஸிடம் மன்னிப்பு கேட்ட கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanமக்கள்நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கொடியை ஏற்றி வைத்தார் கமல்ஹாசன்.

பின்னர் பேசிய கமல்ஹாசன், கட்சியின் தலைவராக தாமும், துணைத் தலைவராக கு.ஞானசம்பந்தனும், பொதுச்செயலாளராக அருணாசலமும், பொருளாளாராக சுரேஷூம் செயல்படுவார்கள் என அறிவித்தார்.

பின்னர் சில கேள்விகளுக்கு பதிலளித்தார் கமல்ஹாசன்.

மக்கள்நீதி மய்யம் கட்சியில் எப்போதுமே அனைவரது கருத்துகளும் கேட்கப்படும் என்றும், ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படும் அமைப்பாக இருக்காது என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியால் எல்டாம்ஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு கமல் மன்னிப்பு தெரிவித்தார்.

ஹோட்டல் ரூம் *போட்டது* மறந்து போச்சா..? *சர்கார்* டைரக்டருக்கு ஸ்ரீரெட்டி கேள்வி

ஹோட்டல் ரூம் *போட்டது* மறந்து போச்சா..? *சர்கார்* டைரக்டருக்கு ஸ்ரீரெட்டி கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ar murugadossபாலியல் ரீதியாக தன்னை பலரும் பயன்படுத்திக் கொண்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட ஸ்ரீரெட்டி, முருதாஸ் ஜி எப்படி இருக்கீங்க என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும் கிரீன்பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கறதா? என்றும் முருகதாசிடம் அவர் கேட்டிருந்தார்.

என்னுடன் நீங்கள் பலமுறை இருந்தாலும் கூறியபடி வாய்ப்பு வழஙகவில்லை என்று ஸ்ரீரெட்டி தெரிவித்து உள்ளார்.

இதற்கு ஏஆர். மு ருகதாஸ் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

இவர் தற்போது விஜய் நடிக்கும் சர்கார் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உழைத்தால் மட்டும் முன்னேற முடியாது; ரஜினி சொல்லும் ரகசியம்..!

உழைத்தால் மட்டும் முன்னேற முடியாது; ரஜினி சொல்லும் ரகசியம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthகல்வி நிறுவன அதிபரான ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதை தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியபோது…

ஏ.சி.சண்முகத்தின் உழைப்பு தன்னை எனக்கு பிடிக்கும். அவர் இரும்பு போல் உழைப்பதால் எறும்பாக இருக்கிறார்.

மன்னிக்கவும் எறும்பாக உழைத்து இரும்பாக இருக்கிறார். இதை வேற இணையத்தில் ட்ரோல் செய்வாங்க.. எனவும் பேசினார்.

ஏசி. சண்முகம் போல நானும் முடியை வைத்திருக்கலாம். ஆனா இப்போ முடி இல்லாம போச்சு என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

பரமஹம்சர் காசிக்கு போக ஆசைப்பட்டார். சேர்த்து வைத்த பணத்தை கொண்டு போகும் வழியில், மக்கள் பட்ட கஷ்டத்தை கண்டு எல்லோருக்கும் உணவளித்து விட்டு அவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை கண்டு இவர்கள் வாயிலாக இறைவனை தரிசித்து விட்டதாக கூறி சென்று விட்டார்.

உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எல்லோரும் உழைத்தாலும் கடவுளின் அருளும் நல்லமனமும் இருந்தால் தான் முன்னேற முடியும்.

நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும்’ என்று பேசினார்.

மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்க்க மோகன்லால் மறுப்பு

மலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்க்க மோகன்லால் மறுப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mohan lal and dieepகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகை ஒருவரைக் கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் மலையாள முன்னணி நடிகரான திலீப் கைது செய்யப்பட்டார்.

இதனால் பெரும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்த இவரின் இமேஜ் அடியோடு பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கேரள நடிகர் சங்கமான அம்மா அமைப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

இதனிடையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த திலீப் 80 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அம்மா கூட்டத்தில், திலீப்பை மீண்டும் உறுப்பினராக சேர்க்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு ரம்யா நம்பீசன், ரீமா, கீது உள்ளிட்ட நடிகைகள் எதிர்ப்புத் தெரிவித்து அம்மா சங்கத்தில் இருந்து விலகினர்.

இதுகுறித்து பேசிய நடிகர் சங்கத் தலைவர் மோகன்லால், இந்த வழக்கின் தொடக்கத்திலிருந்தே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக சங்கம் இருப்பதாகவும், தற்போதைக்கு திலீப்பை சேர்க்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், குற்றமற்றவர் என நிரூபிக்கும் வரை அவருக்கான தடை நீடிக்கும் என்றார்.

விஜய்-ஜெயம் ரவி-சிவகார்த்திகேயன் வரிசையில் இணையும் ஆர்யா

விஜய்-ஜெயம் ரவி-சிவகார்த்திகேயன் வரிசையில் இணையும் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aryaதமிழ் சினிமாவில் எப்போதும் பாக்ஸர் கேரக்டர் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

விஜய் நடித்த பத்ரி, ஜெயம் ரவி நடித்த பூலோகம், எம்.குமரன் S/O மகாலட்சுமி, சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே ஆகிய படங்களை இந்த வரிசையில் சொல்லலாம்.

தற்போது இந்த வரிசையில் இணைய வருகிறார் ஆர்யா.

அறம் பட இயக்குனர் கோபி நயினார் இயக்கவுள்ள புதிய படத்தில் பாக்ஸர் ஆக நடிக்கவிருக்கிறாராம்.

இப்படம் வடசென்னையை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது-

நயன்தாரா நடித்த அறம் படத்தின் வெற்றிக்கு பின்னர் அதன் இரண்டாம் பாகத்தை இயக்குனர் எடுப்பார் என கூறப்பட்ட நிலையில் இவர் ஆர்யாவை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற நடிகர் நடிகைகள் குறித்தும், பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்தும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெறி படத்தில் மீனா மகள்; சர்கார் படத்தில் ரஜினி பேத்தி

தெறி படத்தில் மீனா மகள்; சர்கார் படத்தில் ரஜினி பேத்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sarkarரஜினிக்கு இரண்டு மகள்கள். அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் ஆண் குழந்தைகளே. அப்படியிருக்கையில் எப்படி பேத்தி என நினைக்கிறீர்களா..?

இது நிஜப் பேத்தி அல்ல. காலா படத்தில் ரஜினியின் பேத்தியாக நடித்த பேபி மீனலோச்சனி பற்றிய செய்தி.

இவர் தற்போது ஒரு முக்கிய கேரக்டரில் விஜய்யுடன் சர்கார் படத்தில் நடிக்கிறாராம்.

ஏற்கெனவே தெறி படத்தில் நடிகை மீனாவின் மகள் நைனிகா விஜய்யுடன் நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இப்படத்தில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி உள்ளிட்டோர் நடிக்க முருகதாஸ் இயக்கி வருகிறார்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

More Articles
Follows