தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மக்கள்நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் கொடியை ஏற்றி வைத்தார் கமல்ஹாசன்.
பின்னர் பேசிய கமல்ஹாசன், கட்சியின் தலைவராக தாமும், துணைத் தலைவராக கு.ஞானசம்பந்தனும், பொதுச்செயலாளராக அருணாசலமும், பொருளாளாராக சுரேஷூம் செயல்படுவார்கள் என அறிவித்தார்.
பின்னர் சில கேள்விகளுக்கு பதிலளித்தார் கமல்ஹாசன்.
மக்கள்நீதி மய்யம் கட்சியில் எப்போதுமே அனைவரது கருத்துகளும் கேட்கப்படும் என்றும், ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்படும் அமைப்பாக இருக்காது என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியால் எல்டாம்ஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு கமல் மன்னிப்பு தெரிவித்தார்.