தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில மாதங்களாக தமிழக அரசை மறைமுகமாக விமர்சனம் செய்து வந்தார் உலகநாயகன் கமல்ஹாசன்.
இதுதொடர்பான தனது கருத்துக்களை அறிக்கை மூலமாகவும் ட்விட்டரிலும் தெரிவித்து வந்தார்.
இந்த முறை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரடியாகவே விமர்சித்துள்ளார்.
தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது…
“ஒரு மாநிலத்தில் ஊழல், துயர சம்பவங்கள் நிகழ்ந்தால் மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் ஏராளமான குற்றங்கள் நடந்தும் முதல்வரை எந்த கட்சிகளும் ராஜினாமா செய்ய வலியுறுத்தாதது ஏன்?.” என்று கேட்டுள்ளார்.
“தமிழ்நாடு சிறப்பாக இருக்க வேண்டும் என்பதே என் இலக்கு. எனது குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு துணிச்சல் உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழ்நாட்டை மேம்படுத்த கருவியாக உதவ வேண்டும். அந்த கருவிகள் சரியாக செயல்படவில்லை என்றால், மாற்று கருவியை தேடவேண்டும்”
“நாம் ஊழலில் இருந்து சுதந்திரம் பெறாத வரையில், இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்கத் துணிவு உள்ளவர் வாருங்கள்…. வெல்வோம்” எனவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Kamal HaasanVerified account @ikamalhaasan
சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்க்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும் வெல்வோம்
Kamal asking support from public to stand against corruption