தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் கிரேஸி மோகன் மறைந்து ஓராண்டு ஆகிவிட்டது.
அவரின் முதலாம் ஆண்டு நினைவேந்தலை, டோக்கியோ தமிழ் சங்கம், ‘என்றும் வாழும் கிரேஸி’ என்ற தலைப்பில் நடத்தி அவருக்கு அஞ்சலி செலுத்தவுள்ளது.
வருகிற ஜுன் 10 மாலை 6 மணிக்கு நடக்கும் இந்நிகழ்வு, நேரலையில் ஒளிப்பரப்பாகிறது. இதில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறாராம்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில்…
மக்களை நகைச்சுவை வழியே சிரிக்க, மகிழச் செய்வதே கிரேஸி மோகனுக்கான உண்மை நினைவேந்தலாக இருக்க முடியும் என்பதை கருத்தில் கொண்டும், தற்போது கொரோனா ஊரடங்கில் மக்கள் வீட்டில் இருக்கும் சூழலில் டோக்கியோ தமிழ் சங்கம், கிரேஸி கிரியேசன் உடன் இணைந்து கிரேஸி மோகனுக்கான நேரலை சிறப்பு நினைவந்தல் நிகழ்வை ஜுன் 10 அன்று கமல்ஹாசன் முன்னிலையில் பெருமையுடன் வழங்குகிறது.
இதில் 25க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகள், சங்கங்கள் இணைந்துள்ளன. சமூக வலைதளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படும் இந்நிகழ்வில் நாசர், பிரபு, குஷ்பு, கே.எஸ்.ரவிக்குமார், சந்தானபாரதி, ஞானசம்பந்தன் உள்ளிட்ட பிரபலங்கள் சிறப்பிக்கின்றனர்.
இந்த நிகழ்வில் கிரேஸி மோகனின் சிறப்பு நினைப்பு பாடல் ஒன்றை நடிகர் கமல்ஹாசன் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.