தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
25 ஆண்டுகளாக பல யூகங்கள் வந்தாலும் 2017 டிசம்பர் 31ல் தான் தன் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
2020 ஆண்டு மாதங்களில் அரசியல் அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பை உருவாக்கினார் ரஜினி.
இத்துடன் கட்சிப் பணிகளையும் மும்முரமாக தொடங்கினார்.
ஆனால் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி தன் உடல்நிலை காரணத்தால் அரசியலில் இருந்து பின்வாங்குவதாக அறிவித்தார்.
இதனால் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என ரஜினி மக்கள் மன்றத்தினர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
ஆனால் ரஜினி தனது முடிவை மாற்ற போவதில்லை என அறிக்கை வெளியிட்டார்.
இது போன்று போராட்டங்களை நடத்தி, தன்னை வேதனைக்குள்ளாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார் ரஜினி.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அவருடன் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செந்தில், தேனி மாவட்ட செயலாளர் ஆர்.கணேசன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.
இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் இன்று ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் மன்ற நிர்வாகிகள் ராஜினாமா செய்துவிட்டு, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று பச்சை கொடி காட்டியுள்ளது.
அதே சமயம் ரஜினி ரசிகர்கள் என்பதை எப்போதும் மறந்துவிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Join any party as you like – RMM