கலைஞர்கள் உழைப்பதற்கு ஊக்கம் தருவது விருதுகளே… ‘ஜிலீர்’ ஜீவா

கலைஞர்கள் உழைப்பதற்கு ஊக்கம் தருவது விருதுகளே… ‘ஜிலீர்’ ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor jeevaதமிழக அரசு அறிவித்துள்ள விருதுகளில் 2012க்கான சிறந்த நடிகருக்கான விருதுக்கு ஜீவா தேர்வாகியுள்ளார்.

2012ல் கெளதம் வாசுதேவ் மேனன். இயக்கத்தில் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தில் நடித்ததற்காக அவர் இவ்விருதைப் பெறுகிறார்.

இது பற்றி நடிகர் ஜீவா பேசும் போது “ஒரு நடிகருக்கு படத்தில் நடித்ததற்கு வணிக ரீதியான வெற்றி முக்கியம் அது போல் விருதுகளும் முக்கியம்.

கிடைக்கிற விருது அங்கீகாரம் கலைஞர்களை உற்சாக மன நிலைக்கு இட்டுச் செல்லும். அது மட்டுமல்ல மேலும் உழைக்க ஊக்கம் தரும்.

அவ்வகையில் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படம் விமர்சன ரீதியில் பெரிதும் பாராட்டப்பட்ட படம் .இப்படி பேசப்படும் வகையில் அந்தப் படத்தை கெளதம் மேனன் சார் உருவாக்கியிருந்தார்.

அந்த படத்துக்காக என்னைச் சிறந்த நடிகராகத் தேர்வு செய்துள்ள தமிழக அரசுக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உற்சாகமும் பெருமையும் அளிக்கும் வகையிலான இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்து பரிந்துரை செய்த விருதுக் குழுவினருக்கும் என் நன்றி.

இந்த நேரத்தில் என்னுடன் அந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் கூறிக் கொள்கிறேன்.

அது மட்டுமல்ல 2009 முதல் 2014 வரையிலான படங் களுக்கு விருதுகளுக்குத் தேர்வாகியுள்ள நடிகர் நடிகைகள் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞரகளுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

Jeeva won TN State Best Actor award for 2012

மெலோடி கூட்டணி உடைகிறதா.? இமானை தவிர்த்த பிரபுசாலமன்.?

மெலோடி கூட்டணி உடைகிறதா.? இமானை தவிர்த்த பிரபுசாலமன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

music director nivas k prasannaகுத்துப் பாடல்களுக்கு மத்தியில் மெலோடிக்கு இன்னும் மவுசு இருக்கிறது என்று நிரூபித்து வருபவர் இசையமைப்பாளர் இமான்ன்.

இவரது படங்களில் நிச்சயம் ஒரு மெலோடி பாடலாவது தவறாமல் இடம்பெற்று மாபெரும் ஹிட்டடித்து விடும்.

அதுவும் பிரபுசாலமன், இமான், யுகபாரதி கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு உற்சாம்தான்.

இந்நிலையில், பிரபுசாலமன் அடுத்து இயக்கவுள்ள கும்கி2 படத்திற்கு இமான் இசையைமக்கவில்லையாம்.

அவருக்கு பதிலாக நிவாஸ் பிரசன்னா இசையமைக்கிறார்.

இவர் தெகிடி, சேதுபதி, ஜீரோ, கூட்டத்தில் ஒருத்தன் படங்களுக்கு இசைமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Nivas Prassana compose Music for Kumki2 Whether Director avoids Imman

அட்லிக்கு விஜய் கிடைச்சார்; விக்னேஷுக்கு அஜித் கிடைப்பாரா.?

அட்லிக்கு விஜய் கிடைச்சார்; விக்னேஷுக்கு அஜித் கிடைப்பாரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shankar assistant Vigneshஎந்திரன், நண்பன் உள்ளிட்ட படங்களுக்கு ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் அட்லி.

அந்த நட்பை தொடர்ந்து விஜய் படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

தெறி படத்தை தொடர்ந்து தற்போது மெர்சல் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஷங்கரின் மற்றொரு உதவியாளர் விக்னேஷ்குமார் என்பவர் தன்னுடைய பேட்டியில்… தான் இயக்கும் முதல் படத்தில் அஜித் நடிக்கவேண்டும் என்றும் அது அவருக்கு ஏற்ற மாஸான கதை என்றும் தெரிவித்திருக்கிறார்.

அட்லிக்கு விஜய் கிடைச்சுட்டார். விக்னேஷுக்கு அஜித் கிடைப்பாரா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Will Ajith accept Shankar Assistant Vignesh Script

சமந்தாவுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்; ஏன் தெரியுமா?

சமந்தாவுடன் கேக் வெட்டி கொண்டாடிய சிவகார்த்திகேயன்; ஏன் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan samanthaபொன்ராம் இயக்கிவரும் படத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் சூட்டிங்கில் ஓரிரு தினங்களுக்கு முன் சமந்தா இணைந்தார் என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் மெரினா படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகர் சிறப்பு விருதுக்கு தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டார் சிவகார்த்திகேயன்.

எனவே சூட்டிங் தளத்தில் இந்த வெற்றியை படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் கொண்டாடினாராம்.

Sivakarthikeyan celebrated Best Actor selection at Ponram movie shooting

கமல் படத்தில் பணிபுரிந்தற்காக விருது பெறும் கௌதமி

கமல் படத்தில் பணிபுரிந்தற்காக விருது பெறும் கௌதமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gautami got Best Costume designer for Kamals Vishwaroopamதன் மனைவி சரிகாவை பிரிந்தபின் நடிகர் கமல்ஹாசன் நடிகை கௌதமியுடன் இணைந்து வாழ்ந்து வந்தார்.

திருமணம் செய்துக் கொள்ளாமல் இணைந்து வாழ்ந்து வந்த இவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

இவர்கள் இணைந்திருந்தபோது விஸ்வரூபம் (2012) படத்தில் ஒன்றாக பணியாற்றி இருந்தனர்.

தற்போது இப்படத்தில் காஸ்ட்யூம் டிசைனர் (ஆடை வடிவமைப்பாளர்) பணியாற்றியதற்காக கௌதமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Gautami won TN State award Best Costume designer for Kamals Vishwaroopam

கமல் மன்னிப்பு கேட்ட ஆகனும்; மீண்டும் வரும் சண்டியர் புகழ் கிருஷ்ணசாமி

கமல் மன்னிப்பு கேட்ட ஆகனும்; மீண்டும் வரும் சண்டியர் புகழ் கிருஷ்ணசாமி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal must ask apology says Krishnasamyஏன்டா. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒப்புக் கொண்டோம் என கமலே நினைக்கும் அளவுக்கு அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. (அவர் இதற்கெல்லாம் அசரமாட்டார் என்பதே நிஜம்)

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற காயத்ரி சேரி பிஹேவியர் வார்த்தை படு சர்ச்சைய கிளப்பியதை அடுத்து, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல், மன்னிப்பு கேட்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்காவிட்டால் கடுமையான போராட்டங்களை நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

சண்டியர் என்ற டைட்டிலை கமல் வைத்தபோது, இதே கிருஷ்ணசாமிதான் போராட்டம் நடத்தி விருமாண்டி என பெயர் மாற்ற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதற்கு பிறகு சண்டியர் என்ற தலைப்பில் படம் வேறு ஒரு நடிகர் நடித்து வெளியானதும், அதற்கு எவரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதும் வேறுகதை.

Kamalhassan must ask apology says Krishnasamy

More Articles
Follows