தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பை தடை செய்யவும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்திட வேண்டும் என தமிழக முழுவதும் உள்ள இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுடன் போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒன்றிணைந்து கலையாமல் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் மீன்வளத்துறை ஜெயக்குமார் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் இருவரும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.
இளைஞர்களுடன் இணைந்து தமிழகம் அரசு போராடும்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும்.
இதற்காக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசுவோம். என்றனர்.
முதலமைச்சர் கொடுக்கும் அறிக்கையை பொறுத்து போராட்டத்தின் அடுத்த கட்ட முடிவு இருக்கும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Jallikattu supporters waiting for TN chief Ministers statement