தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இளையராஜா, விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது இளையராஜா பேசியதாவது…
விஜய்சேதுபதியை ஒரு நல்ல நடிகராக உங்களுக்கு தெரியும்.
இந்த கல்லூரி எப்படி ஏழை மாணவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு படிக்க உதவுகிறதோ, அதேபோல் விஜய்சேதுபதியும் திறமையான இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அந்த படங்களை தயாரித்து வருகிறார்.
நானும் அவரும் சென்னைக்கு ஒன்றுமே இல்லாமல் வந்தவர்கள்தான்.
இன்று அவர் நடிகராகவும், நான் இசையமைப்பாளராகவும் வளர்ந்துள்ளோம்.
இந்த வயதில் என்னென்ன சாதிக்க வேண்டுமோ அத்தனையையும் சாதித்துவிடுங்கள்.
ஆனால் கனவு காணுங்கள் என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.
கனவு காண்பதை விட்டுவிட்டு கடுமையாக உழைத்தால்தான் விரும்பிய இலக்கை அடைய முடியும்’ என்று பேசினார் இசைஞானி.