தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியா முழுக்க பிரபலமானாலும் தமிழகத்தில் பிரபலமாக இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
ஒன்று உலகநாயகன் கமல்ஹாசனும் மற்றொன்று நடிகை ஓவியாவுக்கு கிடைத்த ஓட்டுக்களுமே காரணம்.
ஓவியாவுக்கு கிடைத்த ஓட்டு எனக்கு கிடைத்திருந்தால் நான் தமிழகத்தில் ஆட்சி செய்திருப்பேனே என ஒரு கட்சி தலைவரே கூறியிருந்தார்.
இந்த நிகழ்ச்சி தொடங்கி 40 நாட்களை கடந்த நிலையில் திடீரென இதிலிருந்து வெளியேறுவதாக கூறி ஓவியா விலகினார்.
ஆனால் ஓவியாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் இப்போது அதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களுக்கு கிடைப்பதில்லை.
எனவே வைல்ட் கார்டு மூலம் ஓவியாவுக்கு ரீஎண்ட்ரி கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம் பிக்பாஸ் குழுவினர்.