தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மற்றும் ஸ்டெர்லைட் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
மேலும் அனைத்துக் கட்சிகளும் ஒவ்வொரு நாள் ஒரு போராட்டம் பந்த் என அறிவித்து போராடி வருகிறது.
இதனால் தமிழகமே ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
நேற்று மும்பையில் மும்பை இந்தியன் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி சென்னையில் மற்றொரு போட்டி நடைபெறவுள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது ரஜினிகாந்த் பேசியதாவது…
காவிரிக்காக தமிழகமே போராடும்போது, ஐ.பி.எல். போட்டியை நிறுத்தினால் நல்லதுதான்.
அதை சம்பந்தப்பட்டவர்கள் செய்ய வேண்டும். ஒருவேளை முடியாவிட்டால் சென்னை அணி வீரர்கள் விளையாடும் போட்டிகளின்போது கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடலாம்.
இல்லையென்றால் போட்டியை காண போகும் மாணவர்கள், ரசிகர் ரசிகைகள் கருப்பு கொடி, கறுப்பு பேட்ஜ் அணிந்து செல்ல வேண்டும். அப்போது எல்லாருக்கும் தமிழகத்தின் பிரச்சினை தெரிய வரும்” என்று பேசினார் ரஜினி.
IPL match should be stopped if not CSK players must use black flag says Rajini