தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று நடைபெற்ற ஒரு தனியார் கல்லூரி விழாவில் எம்ஜிஆர் திருவுருவச் சிலையை திறந்து வைத்து பேசினார் ரஜினிகாந்த்.
இதுவரை இல்லாத அளவிற்கு அரசியல்வாதிகள் மற்றும் தன்னை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரஜினி பேசினார்.
ஜெயலலிதா இருந்தபோது ஏன் அரசியலுக்கு வரவில்லை என்கிறார்கள். அவர் உயிருடன் இருந்தபோதே அவரை எதிர்த்து நான் தைரியமாக பேசியிருக்கிறேன்.
மீண்டும் மீண்டும் 1996ல் நடந்த அரசியல்களை பற்றி நான் பேச விரும்பவில்லை.
இந்தியாவில் எவரும் செய்யாத அளவிற்கு தன் கட்சியை நன்றாக வழி நடத்தியவர் அவர்.
இன்று அவர் இல்லை. என் அருமை நண்பர் கலைஞரும் அரசியலில் ஆக்டிவ்வாக இல்லை. அந்த வெற்றிடம் உள்ளது. அதான்யா நான் வரசியலுக்கு வருகிறேன்.” என பேசினார் ரஜினிகாந்த்.
I wont get afraid of Jayalalitha says Rajini at MGR Statue opening event