தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி தன் அரசியல் கட்சி மற்றும் கொடி, கொள்கை ஆகியவற்றை பகிரங்கமாக அறிவிக்கவுள்ளார் கமல்ஹாசன்.
இந்நிலையில், அமெரிக்கா சென்றிருந்த கமல் அங்கு ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
மக்கள் பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க போவதாக அவர் அறிவித்தார்.
கமலின் கைவசம் தற்போது சபாஷ் நாயுடு மற்றும் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களே உள்ளன.
மேலும் இந்தியன் 2 படத்தின் சூட்டிங் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்த தகவல் குறித்து கமல் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது கைவசம் உள்ள 3 படங்களை முடித்துக் கொடுப்போன்.
தீவிர அரசியலில் ஈடுபட்டதும், படங்களில் நடிப்பது தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்பேன். அதன்பிற்கு அறிவிப்பேன்” என தெரிவித்துள்ளார் உலகநாயகன்.