தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய் ஆகிய 3 ஹீரோக்களுடன் நடித்துள்ளார் சிம்பு.
அண்மையில் துபாயில் படப்பிடிப்பை முடித்த மணிரத்னம், அடுத்ததாக செர்பியாவில் சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்தார்.
சிம்பு காட்சிகளுடன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளது.
இந்த செய்தியால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க, திடீரென சிம்பு நடிக்கவுள்ள 4 பட செய்திகளை பார்த்தோம்.
சிம்பு 34 – `பைரவா’, `வீரம்’ முதலிய படங்களை தயாரித்த விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் படத்தில் நடிக்கிறார்.
சிம்பு 35 – இங்கிலீஷ் படத்தை தானே இயக்கி நடிக்கவிருக்கிறார்.
சிம்பு 36- லைகா தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கும் `விண்ணைத்தாண்டி வருவேன்’ என்ற படத்தில் நடிக்கிறார்.
சிம்பு 37- கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைகிறார்.
இந்த செய்தி வெளியான சில நிமிடங்களில் சிம்பு பேசிய வீடியோ ஒன்று வெளியானது.
அதில் இனி சினிமாவில் நடிப்பேனா இந்நிலையில், நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘செக்கச் சிவந்த வானம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மணிரத்னமுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் இயக்கத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. அஞ்சலி படம் பார்த்து கஷ்டப்பட்டேன்.
இவருடைய இயக்கத்தில் நடிக்க வில்லை என்று வருத்தப்பட்டேன். மணிரத்னம் இயக்கத்தில் நம்மால் நடிக்க முடியாது என்று நினைத்தேன்.
ஆனால், எனக்கு மணிரத்னம் வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் நடிக்க கூடாது என்று பல பிரச்சனைகள் தடைகள் வந்தாலும், அதையும் தாண்டி என் மேல் நம்பிக்கை வைத்தார்.
அவருக்கு பெரிய நன்றி. படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி.
நான் பிறந்ததிலிருந்து சினிமாவில்தான் இருக்கிறேன். அதை விட்டா வேற எதுவும் தெரியாது.
ரூபாய் 1000 கோடி இருக்கு. நல்லா வசதியா வாழலாம். எனக்கு வாழ்க்கை எந்த பிரச்சனையும் இல்லை.
ஆனால் என்னால் ரோபோ மாதிரி வேலை செய்ய முடியாது. என்னால ஒரு விஷயம் தப்பா இருக்கிறது என்றால், நான் மாற்றிக் கொள்வேன்.
தவறில் இருந்து கற்றுக் கொள்வேன். தப்பு பண்ணா மன்னிப்பு கேட்பேன். ஆனால், பண்ணாத தப்புக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்.
இதுக்கு அப்புறம் படத்தில் நடிப்பேனா, சினிமாவில் இருப்பேனா என்று தெரியவில்லை’.
எனக்கு எல்லாமே என் ரசிகர்கள்தான் என உருக்கமாக பேசியுள்ளார்.
தற்போது 4 படங்களை கமிட்டாகியுள்ள சிம்பு ஏன் இப்படி பேசினார் என்பதுதான் புரியவில்லை.
I dont know whether i will act hereafter says Simbu