தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் படங்களை இந்தியளவில் கொண்டு சென்ற இயக்குனர்களில் மிக முக்கியமானவர் மணிரத்னம்.
இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் மிகப் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது.
லைக்கா தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, ஜெயராம், பார்த்திபன், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணிகளில் மணிரத்னம் உள்ளிட்ட பட குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் மணிரத்னம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருக்கு லேசான அறிகுறிகளே இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவருக்கு இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொண்ட போது கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என தெரியவந்துள்ளது.
எனவே அவர் விரைவில் டிஸ்சார்ஜ் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
How is Mani Ratnam, who is affected by Corona?