ரூ 65 லட்சம் கடனுக்கு ரஜினியை இழுத்து விட்ட தனுஷ் தந்தை கஸ்துாரி ராஜா..; ஐகோர்ட் எச்சரிக்கை

ரூ 65 லட்சம் கடனுக்கு ரஜினியை இழுத்து விட்ட தனுஷ் தந்தை கஸ்துாரி ராஜா..; ஐகோர்ட் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ம் ஆண்டில் சினிமா பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ராவிடம் நடிகர் தனுஷின் தந்தை கஸ்துாரி ராஜா 2 தவணைகளில் 65 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

அப்போது 2 புரோ நோட்டுகளையும் எழுதிக் கொடுத்திருந்தார்.

கடனைத் முகுந்த் சந்த் திருப்பி கேட்டபோது கஸ்தூரி ராஜா கொடுக்கவில்லை. இழுத்தடித்துள்ளார்

ஒரு கட்டத்தில், கடன் தொகையை தான் தரவில்லை என்றால் சம்பந்தியான ரஜினி தருவார் எனவும் போத்ராவுக்கு கஸ்தூரி ராஜா கடிதம் கொடுத்துள்ளார்.

அதன் பிறகும் பணம் கொடுக்காததால், போத்ரா தரப்பில், 2016ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில், கஸ்தூரி ராஜா வாங்கிய கடனுக்கு தான் பொறுப்பாக முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதனை ஏற்றுக் கொண்டார் நீதிபதி.

எனவே முகுந்த்சந்த் போத்ரா சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து முகுந்த்சந்த் போத்ரா இறந்து விட்டடார். இவ்வழக்கை தொடர்ந்து நடத்த அவரது மகன் ககன் போத்ராவுக்கு ஐகோர்ட் அனுமதி அளித்தது.

இவ்வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என கஸ்தூரிராஜா தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும் பணத்தை திருப்பி தருவது தொடர்பாக கஸ்தூரிராஜா எழுதிய கடிதம், நடிகர் ரஜினிகாந்தை எப்படி கட்டுப்படுத்தும் எனவும் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வாரத்தில் இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.

தீ்ர்வுகாண முடியாவிட்டால், வழக்கை விசாரித்து, தவறு செய்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

அதன்பின்னர் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

High court warns Dhanush father Kasthuri Raja

rajini kasthuri raja

ப்ரியாவின் உதட்டை கடிக்க ஆசைப்பட்ட நபர்..; நடிகை கொடுத்த செம ஹாட் ரிப்ளை.!

ப்ரியாவின் உதட்டை கடிக்க ஆசைப்பட்ட நபர்..; நடிகை கொடுத்த செம ஹாட் ரிப்ளை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஓரு அதார் லவ்’ என்ற மலையாள படத்தில் இடம் பெற்ற ‘மாணிக்க மலராய பூவே’ என்ற பாடலில் கண் புருவத்தை) சிமிட்டி இந்திய இளைஞர்களை கட்டிப் போட்டவர் பிரியா பிரகாஷ் வாரியர்.

இதனால் இவருக்கு ஐப்ரோ அழகி் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டது.

2018-ஆம் ஆண்டில் இவரின் படமே அதிகளவில் இணையத்தில் வைரலானது.

இதன் பின்னர் சில படங்களில் நடித்தார்.

‘ஸ்ரீதேவி பங்களா’ என்ற ஹிந்தி திரைப்பட வாய்ப்பை பெற்றார்.

இவர் தன் இணைய பக்கங்களில் ரசிகர்களுடன் உரையாடுவார்.

”ஹேப்பி நியூ இயர்” என்ற படப் பாடலான “மான்வா லாகே” பாடலுக்கு உதட்டை அசைத்து வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இதற்கு சரன் நாயர் என்பவர்.., “உங்கள் உதட்டை கடிக்கனும். எனக்குக் கற்றுக் கொடுங்கள்” என கேட்டுள்ளார்.

பிரியாவும் கொஞ்சம் கூட சளைக்காமல் “ஹ்ம்ம்ம்ம் I will.. நான் செய்வேன்” என பதிலளித்துள்ளார்.

Actress Priya Prakash Varrier reply to her fan

priya

இயக்குனர் ராஜேஷ்-ஜிவி பிரகாஷ் கூட்டணியில் இணையும் தனுஷ்

இயக்குனர் ராஜேஷ்-ஜிவி பிரகாஷ் கூட்டணியில் இணையும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush gv prakash (2)சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ராஜேஷ்.

அதன் பின் அழகு ராஜா, VSOP, மிஸ்டர். லோக்கல் என படு தோல்விப் படங்களை கொடுத்தார்.

தற்போது ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ராஜேஷ்.

சன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இதில் நடிகை அம்ரிதா ஐயர், ரேஷ்மா, யோகி பாபு, பிக்பாஸ் டேனியல், ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் தனுஷ் இணைந்துள்ளார்.

அதாவது ஜிவி இசையில் ஒரு பாடலை அவர் பாடவிருக்கிறாராம்.

‘டாட்டா பை பை’ என்ற முதல் பாடலை கானா வினோத் எழுதுகிறாராம்.

இப்பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Actor Dhanush sung a song for GV Prakash next film

சிவகார்த்திகேயன்-யோகி பாபு-ஐஸ்வர்யா-இமான்-கௌதம் மேனனுக்கு கலைமாமணி விருது..; செம கடுப்பில் தமிழக அரசு

சிவகார்த்திகேயன்-யோகி பாபு-ஐஸ்வர்யா-இமான்-கௌதம் மேனனுக்கு கலைமாமணி விருது..; செம கடுப்பில் தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanகலை மற்றும் பண்பாட்டு வளர்ச்சி மற்றும் தொன்மையாக கலை வடிவங்களை பாதுகாக்கவும் உதவும் கலைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் கடந்த 1954-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு காலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல் இன்று வெளியானது.

இதில் பழம்பெறும் நடிகைகளான, சரோஜா தேவி, சவுகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி, நடிகர் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதர கலைஞர்கள் விவரம் வருமாறு…

நடிகைகள் தேவதர்ஷினி, மதுமிதா

இயக்குனர்கள்

கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா (நடிகர்)

இசையமைப்பாளர்கள், பாடகர்கள்:

டி இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து.

டிவி சீரியல் நடிகர்கள்

நடிகர் நந்தகுமார், நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ் மற்றும் நித்யா

நடன இயக்குனர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், எடிட்டர் ஆண்டனி, மெல்லிசை கோமகன், பாடலாசிரியர்கள் காமகொடியன், காதல் மதி, வசனகர்த்தா வி பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பட்டியல் (கலைமாமணி விருது) தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நிர்வாகிகள் லீக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த நிர்வாகம் மீது முதல்வர் அலுவலகம் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் அதற்கான விசாரணை நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Complete details on Kalaimamani Awards 2021

ஆட்சி மாற்றம் ஏற்படுமா..? புதுச்சேரி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை கெடு

ஆட்சி மாற்றம் ஏற்படுமா..? புதுச்சேரி அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை கெடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilisai Soundararajanபுதுச்சேரியில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் கடந்த சில வருடங்களாகவே மோதல் நீடித்து வருகிறது.

தங்கள் அரசு பணிகளை செய்யவிடாமல் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பிரச்னை செய்வதாக முதல்வர் நாராணயணசாமி தெரிவித்து வந்தார்.

எனவே கிரண் பேடியை துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் புகார் மனுவை புதுச்சேரி முதல்வர் கொடுத்திருந்தார்.

இதனிடையே புதுச்சேரி அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டது.

4 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

நமச்சிவாயம், காங்., – எம்.எல்.ஏ., தீப்பாய்ந்தான் ஆகியோர், கடந்த மாதம், 25ம் தேதி, தங்களின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர்.

பின்னர் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த, மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் ஜான்குமார் ஆகியோரும் ராஜினாமா செய்தனர்.

மொத்தம் 33 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் பலம், சபாநாயகர் சிவக்கொழுந்துவுடன் சேர்த்து 14 ஆக குறைந்துள்ளது.

இவை தவிர 3 நியமன எம்.எல்.ஏக்கள் உடன் சேர்த்து என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 14 ஆக உயர்ந்தது.

எனவே காங்கிரஸ் ஆட்சி புதுச்சேரியில் தொடருமா? என்ற கேள்வி எழுந்தது. சபாநாயகரும் ஆலோசனை நடத்தி வந்தார்.

இதனிடையில. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை கூடுதல் பொறுப்பை ஏற்பார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி தமிழிசை சவுந்தரராஜன் இன்று (பிப்., 18) பொறுப்பேற்று கொண்டார்.

இதனை தொடர்ந்து அவரை முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசினார்.

பின்னர், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு (நாராயணசாமி அரசு,) பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னரின் செயலரிடம் மனு அளித்துள்ளனர் எதிர்க்கட்சியினர்.

அதன்படி வரும் பிப். 22ம் தேதி மாலை 5 மணிக்குள் புதுச்சேரி அரசு, தனது பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார்.

Floor test for Narayanasamy govt on feb 22nd

வழி தெரியாமல் தடுமாறிய தல..; வேறு வழியில்லாமல் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார் அஜித் (வீடியோ)

வழி தெரியாமல் தடுமாறிய தல..; வேறு வழியில்லாமல் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார் அஜித் (வீடியோ)

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சினிமாவை தவிர நடிகர் அஜித்தை பொது வெளியில் பார்ப்பது அபூர்வம்.

ஆனால் சென்னை வேப்பரியில் உள்ள புதிய கமிஷனர் அலுவலகத்திற்கு திடீரென வந்தார் அஜித்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அஜித் அங்கு வர என்ன காரணம் ? என்ற கிடைத்த தகவலின் படி…

சென்னை ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் அஜித்.

வேப்பரியில் உள்ள புதிய கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார் அஜித்.

எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் ரைபிள் கிளப்பிற்கு செல்வதற்கு பதிலாக இங்கு மாறி வந்துவிட்டதாக தெரியவந்தது.

அந்த கார் ஓட்டுனர் இங்கு மாறி அவரை அழைத்து வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அங்கு அஜித்தை பார்த்ததும் சிலர் அவருடன் செஃல்பி எடுக்க ஆசைப்பட்டனர்.

அங்கிருந்த போலீசார் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் நடிகர் அஜித்துடன் செல்பி எடுத்தனர்.

அந்த புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.

தல அஜீத் லேட்டஸ்ட் புகைபடங்கள் இதோ https://www.filmistreet.com/photos/valimai-ajith-images-new-photos-thala-ajith-kumar-latest-stills/

Reason behind Ajith viral photos

More Articles
Follows