நடிகர் தனுஷை தன் மகன் என கூறிய கதிரேசன் வழக்கு தள்ளுபடி

நடிகர் தனுஷை தன் மகன் என கூறிய கதிரேசன் வழக்கு தள்ளுபடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

High Court dismisses Dhanush fake parents caseநடிகர் தனுஷ் தங்கள் மகன் என அறிவிக்கக்கோரி, மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.

அந்த வழக்கின் விசாரணையின் போது நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாகவும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கதிரேசன் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.

இது தொடர்பான நடந்த விசாரணையின்போது, மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.

கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த இவ்வழக்கு நிறைவு பெற்றதால் தனுஷ் தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியுள்ளனர்.

கோர்ட்டின் இந்த தீர்ப்பு குழப்பத்தில் இருந்த தனுஷ் ரசிகர்களையும் திருப்தி அடைய செய்துள்ளதாம்.

High Court dismisses Dhanush fake parents case

dhanush fake parents

தன் தம்பியின் தளபதி ஆசையை நிறைவேற்றி வைப்பாரா பிரியா வாரியர்?

தன் தம்பியின் தளபதி ஆசையை நிறைவேற்றி வைப்பாரா பிரியா வாரியர்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Priya warrier brother wish to meet Thalapathy VijayOru Adaar Love என்ற படத்தில் இடம் பெற்ற கண் புருவம் அசைக்கும் காட்சிகளினால் இந்திய சினிமாவையே தன் பக்கம் திருப்பியவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.

இதனைத் தொடர்ந்து கேரளாவில் நடைபெற்றும் பல நிகழ்ச்சி மேடைகளிலும் இவரை காண முடிகிறது.

கேவி. ஆனந்த் இயக்கும் சூர்யா 37 படத்தில் இவர் நடிப்பார் என்றார்கள். அதன்பின்னர் அது வெறும் வதந்தி என டைரக்டர் அறிவித்தார்.

இந்நிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற ப்ரியா வாரியர் தன் குடும்பம் பற்றி பேசியுள்ளார்.

அப்போது தன் தம்பியின் தீராத ஆசை பற்றி பேசியுள்ளார். அவரின் தம்பி தீவிர விஜய் ரசிகராம்.

‘நீ எப்படியாவது விஜய் படத்தில் நடிச்சுடு. நீ நடிக்க போகும்போது நானும் உன்னுடன் வந்து விஜய்யை நேரில் பார்த்து பேசிவிடுவேன் என்று தன் ஆசையை சொன்னராம்.

ம்ம்ம்.. தன் தம்பியின் தளபதி ஆசை ஐப்ரோ அழகி நிறைவேற்றுவாரா?

Priya warrier brother wish to meet Thalapathy Vijay

விஜய்யை தொடர்ந்து விஜய்சேதுபதியும் இப்படி செய்யலாமா.?

விஜய்யை தொடர்ந்து விஜய்சேதுபதியும் இப்படி செய்யலாமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathis Junga shooting happening during Cinema Strikeதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் காரணமாக கடந்த மார்ச் 16-ந் தேதி முதல் உள்நாட்டில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன.

மேலும் மார்ச் 23ஆம் தேதி முதல் வெளியூர், மற்றும் வெளிநாட்டில் சூட்டிங் நடத்தப்பட கூடாது என விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் உத்தரவிட்டது.

ஆனாலும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்த விஜய் 62, நாடோடிகள் 2, உள்ளிட்ட 4 படங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இதற்கான விளக்கத்தை தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ் தெரிவித்தார்.

இன்று மார்ச் 24ஆம் தேதி ஆகிவிட்ட நிலையில் கோகுல் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சாயிஷா நடிக்கும் ‘ஜுங்கா’ படக்குழுவினர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்றுள்ளனர்.

அந்த நாட்டில் 10 நாட்கள் சூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஸ்டிரைக் அறிவிக்கப்படுவதற்கு முன்பே போர்ச்சுக்கல் செல்ல விமான டிக்கெட், படப்பிடிப்பு அனுமதி ஆகியவை பெறப்பட்டு இருப்பதால் படக்குழு செல்ல வேண்டிய கட்டயா சூழ்நிலை என கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் விஜய்யை போல விஜய்சேதுபதியும் இப்படி செய்யலாமா? என திரையுலகினரே தங்கள் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

வேலை நிறுத்தம் என்றால் இழப்பு வரத்தான் செய்யும். அதற்காக நாம் ஒற்றுமை இல்லாமல் இப்படி செய்வது சரியாகுமா? என கேட்கின்றனர்.

Vijay sethupathis Junga shooting happening during Cinema Strike

இனிமே டி.ஆரை கிண்டல் செய்ய மாட்டாங்க; சிம்பு கொடுத்த மரண அடி

இனிமே டி.ஆரை கிண்டல் செய்ய மாட்டாங்க; சிம்பு கொடுத்த மரண அடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR aka Simbu reaction to his dad T Rajendar hatersவாடா என் மச்சி.. வாழைக்காய் பஜ்ஜி… டண்டனக்கா… ஏய் டனக்குன்க்கா என்று பல அடுக்கு மொழி வசனங்களை நாம் அடிக்கடி கேட்டிருப்போம்.

இந்த வசனங்களுக்கு சொந்தக்காரர் சகலகலா வல்லவன் டி.ராஜேந்தர் தான்.

சினிமாவில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம்.

ஆனால் ஒரு ஹீரோயினை தொடாமல் ஒரு ஹீரோ பல படங்களில் நடித்து வெற்றி பெறுவது சாதாரண காரியமல்ல. அதையும் வெற்றிக்கரமாக செய்து வருபவர்தான் நம்ம டிஆர்.

இப்போ இதையெல்லாம் எதுக்கு சொல்றீங்கன்னு கேட்குறீங்களா..? விஷயம் இருக்கே…

டி.ஆரை பற்றி பல மீம்ஸ்கள் இணையத்தில் வருவதை நாம் பார்த்து இருப்போம். அதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தன் அப்பாவை பற்றி சிம்பு ஒரு வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளார்.

அது ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் ஒளிப்பரப்பானது.

அதில் சிம்பு பேசும்போது…

வாயில் டிஆர். இசை வாசிக்கிறார் என்பார்கள் உங்களால் அது முடியுமா.? அது முடியாது என்பதால்தான் இப்படி அவரை சொல்றீங்க.

தலைமுடியை அப்படி ஆட்டுகிறார் என்கிறார்கள் இந்த வயசிலும் அவர் ஆட்டுகிறார். ஆனா உனக்கு 20 வயசிலேயே தலைமுடியே இல்லை.

எந்த பெண்ணை பார்த்தாலும் உனக்கு ஏதாவது தோன்றும். ஆனால் ஒரே ஒரு பெண்தான் தன் மனைவி என்று அவருடன் வாழ்கிறார்.

நீ இப்போதே நிறைய போதைகளுக்கு அடிமையாகியிருப்பாய் ஆனால் அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது.

இதுபோன்ற திறமை இல்லாதவன் தான் அப்பா உங்களை கிண்டல் செய்கிறான். ஆனால் உங்கள் திறமையை அங்கீகரித்து உங்களை மதித்தவர்களை நான் மதிக்கிறேன் என்று மனம் நெகிழ அதில் பேசியுள்ளார்.

தன் மகனின் பேச்சை கேட்ட டி.ஆர் கண் கலங்கிவிட்டார். அந்த நிகழ்ச்சி பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து அந்த பாசத்திற்கு மரியாதை செய்தனர்.

STR aka Simbu reaction to his dad T Rajendar haters

விஷால் கொடுத்த சோதனைகள்; மீண்டு வருவாரா இரும்புத்திரை மித்ரன்..?

விஷால் கொடுத்த சோதனைகள்; மீண்டு வருவாரா இரும்புத்திரை மித்ரன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and director mithran‘துப்பறிவாளன்’ படத்தை தொடர்ந்து விஷால் நடித்துள்ள படம் ‘இரும்புத்திரை’.

விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ள இப்படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்க, நாயகியாக சமந்தா நடித்துள்ளார்.

இப்படத்தை மித்ரன் என்பவர் இயக்கியுள்ளார்.

இதனிடையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட விஷால் முன்வந்தார்.

அவரின் வேட்பு மனு நிராகரிப்பட்டாலும் அது தொடர்பான சர்ச்சை முடிய பல மாதங்கள் ஆகியது. இதனால் படப் பணிகள் பாதிக்கப்பட்டது.

இதன் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிந்து படம் திரைக்கு வர தயாராகிவிட்டது.

ஒருவழியாக பிரஸ் மீட் ஒன்றை நடத்தி டைரக்டர் மித்ரன் முன்னிலையில் விரைவில் படத்தை வெளியிடுவேன் என அறிவித்தார் விஷால்.

இதன் பின்னர் கீ படத்தின் ஆடியோ வெளியீட்டின் போது, அப்பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு உதவிடும் வகையில் தன் இரும்புத்திரை படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பேன் என்றார்.

தற்போது சினிமா ஸ்டிரைக் தொடங்கிவிட்டது. இதனால் நிறைய படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டிரைக் முடிந்தவுடன் ரிலீசுக்கு தயாராக இருந்த படங்களுக்கே முன்னுரிமை என அறிவித்துவிட்டார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால்.

எனவே இரும்புத்திரை படம் வெளியாவதில் இன்னும் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

வருகிற மே அல்லது ஜுன் மாதம் படத்தை வெளியிட விஷால் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட போதிலும் ஒரு டைரக்டருக்கு இத்தனை சோதனைகளா?

ஸ்டிரைக்கிலும் சூட்டிங் நடத்திய விஜய் ரசிகர்களுக்காக செய்த காரியம்

ஸ்டிரைக்கிலும் சூட்டிங் நடத்திய விஜய் ரசிகர்களுக்காக செய்த காரியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay in Thalapathy 62ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தளபதி 62’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

தற்போது தமிழ் திரையுலகில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருவதால், சிறப்பு அனுமதியுடன் இப்பட சூட்டிங்கை சென்னையில் நடத்தி வருகின்றனர்.

விஜய் பட சூட்டிங்க்கு திரையுலகினரே தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த செய்தி வைரலாகியது. இதனால் சூட்டிங் நடக்கும் இடத்தை அறிந்த விஜய் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வெளியே நின்று ஆரவாரம் செய்தார்கள்.

நிறைய ரசிகர்கள் திரண்டதால் விஜய் வெளியே வரமாட்டார் என பலரும் நினைத்தனர்.

ஆனால் தன் ரசிகர்களுக்காக வெளியே வந்த விஜய் ரசிகர்களை பார்த்து கையை ஆட்டி அவர்களை குஷிப்படுத்தினார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் வில்லன் வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை இந்தாண்டு 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

More Articles
Follows