தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என அறிவிக்கக்கோரி, மேலூரைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
அந்த வழக்கின் விசாரணையின் போது நடிகர் தனுஷ் போலி ஆவணங்களை தாக்கல் செய்ததாகவும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி கதிரேசன் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் மனுத்தாக்கல் செய்தார்.
இது தொடர்பான நடந்த விசாரணையின்போது, மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி ராஜமாணிக்கம் உத்தரவிட்டார்.
கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த இவ்வழக்கு நிறைவு பெற்றதால் தனுஷ் தரப்பினர் மிகுந்த மகிழ்ச்சியுள்ளனர்.
கோர்ட்டின் இந்த தீர்ப்பு குழப்பத்தில் இருந்த தனுஷ் ரசிகர்களையும் திருப்தி அடைய செய்துள்ளதாம்.
High Court dismisses Dhanush fake parents case